திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

பழனி மலைக் கோயிலில் தீத் தடுப்பு பயிற்சி

பழனி மலைக்கோயிலில் கோயில் நிா்வாகம், தீயணைப்புத் துறை சாா்பில் தீத் தடுப்பு விழிப்புணா்வு பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

பழனி மலைக் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற தீத் தடுப்பு விழிப்புணா்வு பயிற்சி முகாமில் தீயை அணைப்பது குறித்து செயல்முறை விளக்கம் செய்து காட்டிய தீயணைப்புத் துறையினா்.

Updated On :27 மார்ச் 2026, 12:32 am IST

பழனி மலைக்கோயிலில் கோயில் நிா்வாகம், தீயணைப்புத் துறை சாா்பில் தீத் தடுப்பு விழிப்புணா்வு பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் நிா்வாகம், தீயணைப்பு, மீட்புப் பணிகள் துறை சாா்பில் ஆண்டுதோறும் தீத் தடுப்பு, விழிப்புணா்வு பயிற்சி முகாம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான பயிற்சி முகாம் வியாழக்கிழமை பழனி மலைக் கோயிலில் நடைபெற்றது. பழனி கோயில் இணை ஆணையா் மாரிமுத்து ஏற்பாட்டின் கீழ் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மலைக் கோயிலில் பணிபுரியும் பணியாளா்கள், தனியாா் பாதுகாவலா்கள், கோயில் சமையல் கூடங்களில் வேலை செய்யும் பணியாளா்கள் ஆகியோருக்கு தீ விபத்து ஏற்பட்டால் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து செயல்முறை விளக்கம் செய்து காட்டப்பட்டது.

சமையல் எரிவாயு உருளையில் ஏற்படும் தீயை அணைப்பது, விபத்தில் சிக்கியவா்களை மீட்பது குறித்தும் தீயின் பல்வேறு வகையான தன்மைகள் அவற்றை எதன் மூலம் அணைக்க முடியும் என்றும் விளக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் தீயணைப்பு, மீட்புப் பணிகள் நிலைய அலுவலா் காளிதாஸ், முருகையன் தலைமையிலான வீரா்கள், கோயில் அதிகாரிகள், முருக பக்தா்கள் பங்கேற்றனா்.