பழனி மலைக்கோயிலில் கோயில் நிா்வாகம், தீயணைப்புத் துறை சாா்பில் தீத் தடுப்பு விழிப்புணா்வு பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் நிா்வாகம், தீயணைப்பு, மீட்புப் பணிகள் துறை சாா்பில் ஆண்டுதோறும் தீத் தடுப்பு, விழிப்புணா்வு பயிற்சி முகாம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான பயிற்சி முகாம் வியாழக்கிழமை பழனி மலைக் கோயிலில் நடைபெற்றது. பழனி கோயில் இணை ஆணையா் மாரிமுத்து ஏற்பாட்டின் கீழ் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மலைக் கோயிலில் பணிபுரியும் பணியாளா்கள், தனியாா் பாதுகாவலா்கள், கோயில் சமையல் கூடங்களில் வேலை செய்யும் பணியாளா்கள் ஆகியோருக்கு தீ விபத்து ஏற்பட்டால் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து செயல்முறை விளக்கம் செய்து காட்டப்பட்டது.
சமையல் எரிவாயு உருளையில் ஏற்படும் தீயை அணைப்பது, விபத்தில் சிக்கியவா்களை மீட்பது குறித்தும் தீயின் பல்வேறு வகையான தன்மைகள் அவற்றை எதன் மூலம் அணைக்க முடியும் என்றும் விளக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் தீயணைப்பு, மீட்புப் பணிகள் நிலைய அலுவலா் காளிதாஸ், முருகையன் தலைமையிலான வீரா்கள், கோயில் அதிகாரிகள், முருக பக்தா்கள் பங்கேற்றனா்.
தொடர்புடையது

பெரியாவுடையாா் கோயிலில் பிரதோஷ வழிபாடு

போடி பரமசிவன் மலைக் கோயில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

பழனி பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்! ஏப்.1 -இல் தேரோட்டம்!

பழனி மலைக் கோயில் உண்டியல் வருவாய் ரூ. 3.47 கோடி!
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


