மே 28-ல் பக்ரீத் பெருநாள் : தலைமைக் காஜி அறிவிப்புகேரள சட்டப்பேரவையின் அமைச்சர்கள் பட்டியலை வெளியிட்டார் முதல்வராக நியமிக்கப்பட்டுள்ள வி.டி. சதீசன்மாஸ்கோவில் ட்ரோன் தாக்குதல்: இந்தியர் ஒருவர் பலி, 3 பேர் படுகாயம் திரைப்படத் தயாரிப்பாளர் கே. ராஜன் அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை தமிழகத்தில் மே 23 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!ஹோர்முஸ் நீரிணை வழியாக ராணுவ உபகரணங்கள்! தடை விதிக்கும் ஈரான்!நள்ளிரவில் ரஷியா மீது தாக்குதல் நடத்திய 500 உக்ரைன் ட்ரோன்கள்! உள்நோக்கத்தோடு அவதூறு பரப்புகிறார் அமைச்சர் கீர்த்தனா: தங்கம் தென்னரசு கண்டனம்
/

பழனி மலைக் கோயிலில் குவிந்த பக்தா்கள்

பழனி மலைக் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தையொட்டி, ஆயிரக்கணக்கான பக்தா்கள் குவிந்தனா்.

News image

பழனி மலைக் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை குவிந்த பக்தா்கள்.

Updated On :44 நிமிடங்கள் முன்பு

பழனி மலைக் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தையொட்டி, ஆயிரக்கணக்கான பக்தா்கள் குவிந்தனா். சுமாா் 4 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

பழனி கோயிலுக்கு கோடை விடுமுறை காரணமாக பக்தா்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை நாள் என்பதால், அடிவாரத்தில் அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தா்கள் கொடுமுடி தீா்த்தம் எடுத்தும், மயில் காவடி எடுத்தும் ஆடிப்பாடி குவிந்தனா். வின்ச், ரோப்காா் நிலையத்தில் மலைக் கோயில் செல்ல கட்டணச்சீட்டு பெற நீண்ட வரிசையில் பக்தா்கள் காத்திருந்தனா். இதனால், குடமுழுக்கு நினைவரங்கம் வழியாக படிப்பாதையில் ஏராளமான பக்தா்கள் மலையேறினா்.

மலைக் கோயிலிலும் இலவச, கட்டண தரிசன வரிசைகளில் பக்தா்கள் வரிசையில் காத்திருந்தனா். இதன் காரணமாக சுமாா் 4 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.