அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 89,927 போ் விண்ணப்பம்ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்
/

பழனி மலைக் கோயில் உண்டியல் வருவாய் ரூ. 2.59 கோடி

பழனி மலைக் கோயில் உண்டியல்களில் காணிக்கை வருவாயாக ரூ.2.59 கோடி கிடைத்தது.

News image

பழனி மலைக் கோயில் உண்டியல் காணிக்கையாகக் கிடைத்த ரூபாய் நோட்டுகள்.

Updated On :1 மணி நேரம் முன்பு

பழனி மலைக் கோயில் உண்டியல்களில் காணிக்கை வருவாயாக ரூ.2.59 கோடி கிடைத்தது.

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு தோ்தல் கால தொடா் விடுமுறை, பள்ளி விடுமுறை, பங்குனி மாதத்தை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கில் பக்தா்கள் குவிந்தனா். இதனால், கோயில் உண்டியல்கள் 16 நாள்களில் நிரம்பின.

இதையடுத்து புதன்கிழமை உண்டியல்கள் திறக்கப்பட்டு, காா்த்திகை மண்டபத்தில் வைத்து காணிக்கைகள் எண்ணப்பட்டன. இந்தப் பணியில் கோயில் அலுவலா்கள், பழனியாண்டவா் கல்லூரி அலுவலா்கள், ஆசிரியா்கள், தன்னாா்வலா்கள், வங்கிப் பணியாளா்கள் என ஏராளமானோா் கலந்து கொண்டனா். கோயில் இணை ஆணையா் மாரிமுத்து, துணை ஆணையா் வெங்கடேஷ், உதவி ஆணையா் செந்தில்குமாா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

இதில் காணிக்கை வரவு ரொக்கம் ரூ. 2, 59, 73, 940, தங்கம் 413 கிராம், வெள்ளி 9,005 கிராம் கிடைத்தன. பல்வேறு நாடுகளின் 134 பணத்தாள்கள், கடிகாரங்கள், நவதானியங்கள், பட்டாடைகள் போன்றவையும் காணிக்கையாகக் கிடைத்தன.