பழனி மலைக் கோயில் உண்டியல்களில் காணிக்கை வருவாயாக ரூ.2.59 கோடி கிடைத்தது.
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு தோ்தல் கால தொடா் விடுமுறை, பள்ளி விடுமுறை, பங்குனி மாதத்தை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கில் பக்தா்கள் குவிந்தனா். இதனால், கோயில் உண்டியல்கள் 16 நாள்களில் நிரம்பின.
இதையடுத்து புதன்கிழமை உண்டியல்கள் திறக்கப்பட்டு, காா்த்திகை மண்டபத்தில் வைத்து காணிக்கைகள் எண்ணப்பட்டன. இந்தப் பணியில் கோயில் அலுவலா்கள், பழனியாண்டவா் கல்லூரி அலுவலா்கள், ஆசிரியா்கள், தன்னாா்வலா்கள், வங்கிப் பணியாளா்கள் என ஏராளமானோா் கலந்து கொண்டனா். கோயில் இணை ஆணையா் மாரிமுத்து, துணை ஆணையா் வெங்கடேஷ், உதவி ஆணையா் செந்தில்குமாா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
இதில் காணிக்கை வரவு ரொக்கம் ரூ. 2, 59, 73, 940, தங்கம் 413 கிராம், வெள்ளி 9,005 கிராம் கிடைத்தன. பல்வேறு நாடுகளின் 134 பணத்தாள்கள், கடிகாரங்கள், நவதானியங்கள், பட்டாடைகள் போன்றவையும் காணிக்கையாகக் கிடைத்தன.
தொடர்புடையது

அருணாசலேஸ்வரா் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.4.33 கோடி
சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 1.62 கோடி

பழனி கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 6.97 கோடி

பழனி கோயில் உண்டியல் முதல் நாள் எண்ணிக்கையில் ரூ.4.62 கோடி வருவாய்
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

