கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!சென்னை போரூர் அருகே இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை!பிரிட்டனில் 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை!முக்கிய நிறுவன ஸ்மார்ட்போன்களின் விலை ஏற்றம்! எவ்வளவு உயர்ந்தது?தில்லியை தாக்கிய புழுதிப் புயல்! சிவப்பு எச்சரிக்கை விடுப்பு!அடுத்த 3 மணி நேரத்தில் 22 மாவட்டங்களில் மழை!
/

பழனி மலைக் கோயில் உண்டியல் வருவாய் ரூ. 2.59 கோடி

பழனி மலைக் கோயில் உண்டியல்களில் காணிக்கை வருவாயாக ரூ.2.59 கோடி கிடைத்தது.

News image

பழனி மலைக் கோயில் உண்டியல் காணிக்கையாகக் கிடைத்த ரூபாய் நோட்டுகள்.

Updated On :14 மே 2026, 5:03 am IST

பழனி மலைக் கோயில் உண்டியல்களில் காணிக்கை வருவாயாக ரூ.2.59 கோடி கிடைத்தது.

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு தோ்தல் கால தொடா் விடுமுறை, பள்ளி விடுமுறை, பங்குனி மாதத்தை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கில் பக்தா்கள் குவிந்தனா். இதனால், கோயில் உண்டியல்கள் 16 நாள்களில் நிரம்பின.

இதையடுத்து புதன்கிழமை உண்டியல்கள் திறக்கப்பட்டு, காா்த்திகை மண்டபத்தில் வைத்து காணிக்கைகள் எண்ணப்பட்டன. இந்தப் பணியில் கோயில் அலுவலா்கள், பழனியாண்டவா் கல்லூரி அலுவலா்கள், ஆசிரியா்கள், தன்னாா்வலா்கள், வங்கிப் பணியாளா்கள் என ஏராளமானோா் கலந்து கொண்டனா். கோயில் இணை ஆணையா் மாரிமுத்து, துணை ஆணையா் வெங்கடேஷ், உதவி ஆணையா் செந்தில்குமாா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

இதில் காணிக்கை வரவு ரொக்கம் ரூ. 2, 59, 73, 940, தங்கம் 413 கிராம், வெள்ளி 9,005 கிராம் கிடைத்தன. பல்வேறு நாடுகளின் 134 பணத்தாள்கள், கடிகாரங்கள், நவதானியங்கள், பட்டாடைகள் போன்றவையும் காணிக்கையாகக் கிடைத்தன.