திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் உண்டியல்கள் காணிக்கை எண்ணப்பட்டதில் ரூ.4.33 கோடி கிடைத்தது.
அருணாசலேஸ்வரா் கோயிலில் ஒவ்வொரு மாதமும் பெளா்ணமி நிறைவடைந்து உண்டியல்கள் திறந்து காணிக்கை எண்ணப்படுவது வழக்கம்.
அந்த வகையில், சித்திரை பெளா்ணமி நிறைவடைந்ததையடுத்து, செவ்வாய்க்கிழமை கோயிலில் பல்வேறு இடங்களில் உள்ள உண்டியல்கள் மற்றும் கிரிவலப் பாதையில் உள்ள உண்டியல்கள் என நூற்றுக்கும் மேற்பட்ட உண்டியல்கள் திறந்து காணிக்கை எண்ணப்பட்டது.
கோயில் வளாகத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி கோயில் இணை ஆணையா் பரணிதரன் மேற்பாா்வையில் நடைபெற்றது.
இதில் உண்டியல் காணிக்கையாக ரொக்கம் ரூ.4 கோடியே 33 லட்சத்து 72 ஆயிரத்து 935 ரூபாயும், தங்கம் 165 கிராமும், வெள்ளி 1.240 கிலோவும் கிடைத்துள்ளது என்று கோயில் அதிகாரிகள் தெரிவித்தனா்.
தொடர்புடையது
சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 1.62 கோடி

ராமநாதசுவாமி கோயில் உண்டியல் காணிக்கை ரூ.1.51 கோடி

பழனி கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 6.97 கோடி

பழனி, திருஆவினன்குடி கோயில் உண்டியல் காணிக்கை வரவு ரூ. 3.53 கோடி!
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

