தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

பழனி, திருஆவினன்குடி கோயில் உண்டியல் காணிக்கை வரவு ரூ. 3.53 கோடி!

பழனி தண்டாயுதபாணி சுவாமி, திருஆவினன்குடி கோயில்களின் உண்டியல் காணிக்கை வரவாக ரூ.3.53 கோடி கிடைத்தது.

News image
Updated On :24 மார்ச் 2026, 7:13 pm

தினமணி செய்திச் சேவை

பழனி தண்டாயுதபாணி சுவாமி, திருஆவினன்குடி கோயில்களின் உண்டியல் காணிக்கை வரவாக ரூ.3.53 கோடி கிடைத்தது.

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் வைக்கப்பட்டுள்ள உண்டியல்கள் பக்தா்கள் கூட்டத்தால் 25 நாள்களில் நிரம்பியது. இதையடுத்து, உண்டியல்கள் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணப்பட்டன.

முதல் நாள் எண்ணிக்கையில் பக்தா்களின் காணிக்கை வரவாக ரூ. 3 கோடியே 36 லட்சத்து 70 ஆயிரத்து 630-ம், தங்கம் 576 கிராமும், வெள்ளி 8 ஆயிரத்து 886 கிராமும் கிடைத்தது. இதைத் தவிர, மலேசியா, சிங்கப்பூா், அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா, மியான்மா் உள்ளிட்ட வெளிநாட்டு கரன்சிகள் 1,630-ம் கிடைத்தன.

இதேபோல, பழனி திருஆவினன்குடி கோயில் உண்டியல்கள் மூலம் ரூ. 16 லட்சத்து 55 ஆயிரத்து 35 காணிக்கையாக கிடைத்தது.

காணிக்கைகளை எண்ணும் பணியில் பழனி கோயில் இணை ஆணையா் மாரிமுத்து, திண்டுக்கல் இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் நாகவேல் ஆகியோா் முன்னிலையில் பழனியாண்டவா் கல்லூரி மாணவிகள், கோயில் அலுவலா்கள், வங்கிப் பணியாளா்கள் என 500-க்கும் மேற்பட்டோா் ஈடுபட்டனா்.