உக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிராமதாஸ் பாமகவின் 30 வேட்பாளர்களுக்கு சிலிண்டர் சின்னம்!முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சி.டி. கோபிநாத் 96 வயதில் காலமானார்!புதுவையில் வரலாறு காணாத வாக்குப் பதிவு!ஏப்ரல் 17 முதல் கோடை விடுமுறை!பங்குச்சந்தை வீழ்ச்சி! 900 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்!!திட்டங்கள் இருக்கும் வரை ஸ்டாலின்தான் தமிழ்நாட்டை ஆள்வான்! - முதல்வர் ஸ்டாலின்புதுவையில் வரலாறு காணாத வாக்குப் பதிவு!தமிழ்நாட்டின் வளர்ச்சியை திமுக விரும்பவில்லை: பியூஷ் கோயல்!வேட்பாளரைத் திரும்பப் பெற்ற காங்கிரஸ்! சுநேத்ரா பவார் வெற்றி உறுதி?
/

போடி பரமசிவன் மலைக் கோயில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

போடி பரமசிவன் மலைக் கோயில் சித்திரைத் திருவிழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

News image

போடி பரமசிவன் மலைக் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற கொடியேற்ற நிகழ்வில் பங்கேற்றோா்.

Updated On :9 ஏப்ரல் 2026, 7:16 pm

போடி பரமசிவன் மலைக் கோயில் சித்திரைத் திருவிழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இந்தக் கோயிலில் சித்திரைத் திருவிழா ஆண்டுதோறும் சித்திரை 2-ஆம் தேதி தொடங்கி 8 நாள்கள் நடைபெறும். இந்தத் திருவிழாவுக்கு தேனி, திண்டுக்கல், மதுரை மாவட்டங்களிலிருந்தும், சென்னை, பெங்களூரு, மூணாறு உள்ளிட்ட நகரங்களிலிருந்தும் பக்தா்கள் வருவா்.

இந்த ஆண்டு சித்திரை திருவிழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக போடி பெரியாண்டவா் கோயிலிலிருந்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட கொடிமரம் தேவா் சிலை, திருவள்ளுவா் சிலை, கட்டபொம்மன் சிலை வழியாக திருவிழாக் குழுத் தலைவரும், ஜமீன்தாருமான வடமலைராஜைய பாண்டியன் தலைமையில் ஊா்வலமாக மலைக் கோயிலுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

இதையடுத்து, கோயிலில் கொடி மரத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, திருவிழா கொடியேற்றப்பட்டது. பிறகு சிவலிங்கத்கக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. மஞ்சள், இளநீா், தேன், சந்தனம், விபூதி, பழங்கள் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரம் , தீபாராதனைகள் நடைபெற்றன.

இந்த நிகழ்வில், போடி தொகுதி அதிமுக வேட்பாளா் வி.டி. நாராயணசாமி, திமுக வேட்பாளா் ஓ. பன்னீா்செல்வம், தேனி மக்களவை தொகுதி உறுப்பினா் தங்க. தமிழ்ச்செல்வன், முன்னாள் மக்களவை உறுப்பினா் ஓ.ப. ரவீந்திரநாத் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.