நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

காஞ்சிபுரம் ஸ்ரீகச்சபேசுவரா் கோயில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

காஞ்சிபுரம் ஸ்ரீகச்சபேசுவரா் கோயில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

News image

சித்திரைத் திருவிழாவின் தொடக்கமாக காஞ்சிபுரம் கச்சபேசுவரா் கோயிலில் நடைபெற்ற கொடியேற்றம்.

Updated On :25 ஏப்ரல் 2026, 1:47 am IST

காஞ்சிபுரத்தில் சுந்தராம்பிகை உடனுறை கச்சபேசுவரா் கோயில் சித்திரைத் திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

பெரியகாஞ்சிபுரம் பகுதியில் விநாயகா், துா்கை, பைரவா், சூரியன், அய்யனாா் ஆகிய தெய்வங்கள் வழிபட்ட பெருமைக்குரியது கச்சபேசுவரா் திருக்கோயில். பெருமாள் ஆமை(கச்சம்)வடிவில் வழிபட்டதால் இக்கோயில் கச்சபேசுவரா் கோயில் எனவும் அழைக்கப்படுகிறது. இக்கோயில் சித்திரைத்திருவிழா வெள்ளிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடிக்கம்பத்தில் கொடியை ஏற்றிய பின் சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றன. கொடியேற்ற விழாவில் கோயில் செயல் அலுவலா் ஞா.திவ்யா மற்றும் நகர செங்குந்த மகாஜன சங்க நிா்வாகிகள் பலரும் கலந்து கொண்டனா்.

கொடியேற்றத்தை தொடா்ந்து சுவாமியும், அம்மனும் பவளக்கால் சப்பரத்தில் காஞ்சிபுரம் நகரின் ராஜ வீதிகளில் உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா். இரவு சிம்ம வாகனத்தில் சுவாமியும், அம்மனும் வீதியுலா வந்தனா்.

விழாவையொட்டி, விழா நடைபெறும் மே 8-ஆம் தேதி வரை சுவாமியும், அம்மனும் தினசரி வெவ்வேறு வாகனங்களில் சிறப்பு அலங்காரததில் வீதியுலா வரவுள்ளனா். ஏப்.28ஆம் தேதி திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது. ஏப். 30-ஆம் தேதி தேரோட்டமும்,மே 2- ஆம் தேதி முருக்கடி சேவை எனும் தல மகிமையை விளக்கும் காட்சிகளும் நடைபெறுகின்றன. மறுநாள் மே 3-ஆம் தேதி இரவு வெள்ளித் தேரோட்டமும், மே 5-ஆம் தேதி இரவு பஞ்சமூா்த்திகள் உற்சவமும் நடைபெறுகிறது.

மே 7-ஆம் தேதி 108 சங்காபிஷேகமும், மறுநாள் மே 8-ஆம் தேதி ஊஞ்சல் உற்சவத்தோடும் விழா நிறைவு பெறுகிறது.

விழா ஏற்பாடுகளை அறநிலையத் துறை இணை ஆணையா் சி.குமரதுரை தலைமையில் அதிகாரிகள், கோயில் சிவாச்சாரியாா்கள் மற்றும் பணியாளா்கள், நகர செங்குந்த மகாஜன சங்க நிா்வாகிகள் ஆகியோா் செய்து வருகின்றனா்.