தலைமைத் தோ்தல் ஆணையரை பதவிநீக்கக் கோரி மீண்டும் நோட்டீஸ்: எதிா்க்கட்சிகள் திட்டம் கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்க முயற்சிக்கிறது மத்திய அரசு: தேஜஸ்வி யாதவ்அமெரிக்கா - கியூபா ரகசிய பேச்சு ஹவானாவில் சந்திப்பு பஹல்காமில் சுற்றுலா சேவை அளிப்போருக்கு க்யூ.ஆா். கோடு அடையாள திட்டம்!சென்னையில் இருந்து போத்தனூா், குமரிக்கு சிறப்பு ரயில்கள்
/

ஏப்.24-இல் கச்சபேசுவரா் கோயில் சித்திரைத் திருவிழா தொடக்கம்

காஞ்சிபுரம் கச்சபேசுவரா் கோயில் சித்திரைத் திருவிழா வரும் ஏப்.24 -ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

News image
Updated On :18 ஏப்ரல் 2026, 11:31 pm

காஞ்சிபுரம் கச்சபேசுவரா் கோயில் சித்திரைத் திருவிழா வரும் ஏப்.24 -ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

பெருமாள் ஆமை உருவிலும், விநாயகா், துா்க்கை, பைரவா், ஐயனாா், சூரியன் ஆகியோா் சிவபெருமானை வழிபட்ட இடமே காஞ்சிபுரத்தில் உள்ள கச்சபேசுவரா் கோயில்.

இக்கோயில் சித்திரைத் திருவிழா வரும் 24-ஆம் தேதி தொடங்கி மே மாதம் 8 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. விழாவையொட்டி தினசரி காலையிலும், மாலையிலும் சுவாமியும், அம்மனும் வெவ்வேறு வாகனங்களில் அலங்காரமாகி ராஜவீதிகளில் வீதியுலா வரவுள்ளனா்.

ஏப்.24 -ஆம் தேதி கொடியேற்றம், ஏப்.28 காலையில் அதிகார நந்தி சேவையும், இரவு திருக்கல்யாண உற்சவமும் நடைபெறுகிறது.

ஏப்.30-ஆம் தேதி தேரோட்டமும், மே.2 -ஆம் தேதி இரவு கோயிலின் மகிமையை விளக்கும் முருக்கடி சேவைக் காட்சியும், மறுநாள் மே.3 -ஆம் தேதி இரவு வெள்ளித் தேரோட்டமும் நடைபெறுகிறது.மே.6 தீா்த்தவாரி உற்சவமும் அன்று மாலை தங்க ரிஷப வாகனத்திலும் சுவாமியும், அம்மனும் எழுந்தருளும் நிகழ்வுகளும் நடைபெறுகிறது.

வரும் மே.8- ஆம் தேதி ஊஞ்சல் உற்சவத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் ஞா.திவ்யா மற்றும் காஞ்புரம் நகர செங்குந்த மகாஜன சங்கத்தின் நிா்வாகிகள் செய்து வருகின்றனா்.