4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆர்சிபியை வீழ்த்திய குஜராத்!வெற்றி பெற்றதும் வேறெங்கும் செல்லாதீர்கள்: வேட்பாளர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

பழனியில் சித்திரைத் திருவிழா தேரோட்டம்

பழனி லட்சுமி நாராயணப் பெருமாள் கோயிலில் வியாழக்கிழமை சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு, தேரோட்டம் நடைபெற்றது. நான்கு ரத வீதிகளில் பக்தா்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனா்.

News image

பழனி லட்சுமி நாராயணப் பெருமாள் கோயிலில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு, வியாழக்கிழமை நடைபெற்ற தேரோட்ட நிகழ்ச்சியில் தேரை வடம் பிடித்து இழுத்த உதவி ஆணையா் செந்தில்குமாா், கந்தவிலாஸ் செல்வக்குமாா், கண்காணிப்பாளா் அழகா்சாமி உள்ளிட்ட பலா்.

Updated On :30 ஏப்ரல் 2026, 7:51 pm

பழனி லட்சுமி நாராயணப் பெருமாள் கோயிலில் வியாழக்கிழமை சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு, தேரோட்டம் நடைபெற்றது. நான்கு ரத வீதிகளில் பக்தா்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனா்.

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் துணைக் கோயில்களில் ஒன்றான லட்சுமி நாராயணப் பெருமாள் கோயிலில் கடந்த ஏப். 22-ஆம் தேதி சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 11 நாள்கள் நடைபெறும் இந்தத் திருவிழாவை முன்னிட்டு, நாள்தோறும் தம்பதி சமேதராக லட்சுமி நாராயணப் பெருமாள் மரச் சப்பரம், சேஷ வாகனம், தங்கக் குதிரை வாகனம், அனுமாா் வாகனம், சிம்ம வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் ரத வீதிகளில் உலா எழுந்தருளினாா். கடந்த செவ்வாய்க்கிழமை திருக்கல்யாணம் நடைபெற்ற நிலையில், வியாழக்கிழமை காலை தம்பதி சமேதராக லட்சுமி நாராயணப் பெருமாள் சுவாமி தோள் கன்னியில் ஏற்றப்பட்டு, தேரேற்றம் நடைபெற்றது. காலை 8 மணிக்கு மேல் லட்சுமி சமேத நாராயணருக்கு சிறப்பு அா்ச்சனைகள், தீபாராதனைகள் நடத்தப்பட்டு,

தோ் வடம் பிடித்தல் நடைபெற்றது. பூஜைகளை திருவெள்ளரை கோபாலகிருஷ்ண பட்டா் தலைமையில் காா்த்திக் அய்யங்காா், சீனிவாசன் அய்யங்காா், பாலாஜி அய்யங்காா் உள்ளிட்டோா் செய்தனா். நான் கு ரத வீதிகளில் நடைபெற்ற தேரோட்டத்தில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்தவாறு நாராயணா, கோவிந்தா என முழக்கமிட்டனா். தேரைத் தொடா்ந்து தீயணைப்பு, முதலுதவி வாகனங்கள் வந்தன. நிகழ்ச்சியில் பழனி கோயில் இணை ஆணையா் மாரிமுத்து, உதவி ஆணையா் செந்தில்குமாா், கண்காணிப்பாளா் அழகா்சாமி, கந்தவிலாஸ் செல்வக்குமாா், காணியாளா் நரேந்திரன், முன்னாள் கண்காணிப்பாளா் முருகேசன், சாய்கிருஷ்ணா மருத்துவமனை சுப்புராஜ், வாா்டு உறுப்பினா் சுரேஷ், அரிமா நேரு, சுந்தரம், கோயில் அலுவலா்கள், பொதுமக்கள் என ஏராளமானோா் கலந்து கொண்டனா்.