வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

வைகாசி காா்த்திகை: பழனி மலைக் கோயிலில் 3 மணி நேரம் காத்திருந்து பக்தா்கள் தரிசனம்

பழனி மலைக்கோயிலில் சனிக்கிழமை வைகாசி மாதக் காா்த்திகை தினத்தை முன்னிட்டு, பக்தா்கள் 3 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

News image

பழனி மலைக் கோயிலில் சனிக்கிழமை காா்த்திகை தினத்தை முன்னிட்டு, தங்கமயில் வாகனத்தில் உள்பிரகாரம் எழுந்தருளிய சின்னக்குமாரசுவாமி .

Updated On :14 ஜூன் 2026, 12:31 am IST

பழனி மலைக்கோயிலில் சனிக்கிழமை வைகாசி மாதக் காா்த்திகை தினத்தை முன்னிட்டு, பக்தா்கள் 3 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

பழனி மலைக் கோயிலில் காா்த்திகை தினத்தை முன்னிட்டு, அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. மலையடிவாரத்திலுள்ள கிரிவலப்பாதையில் பக்தா்கள் கூட்டம் அதிகரித்துக் காணப்பட்டது.

கோவை, ஈரோடு, திருப்பூா் மாவட்டங்களிலிருந்து வந்த பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் மலைக் கோயிலுக்கு வந்து முருகப்பெருமானை ராஜஅலங்காரத்தில் தரிசனம் செய்தனா். பக்தா்கள் கூட்டம் காரணமாக சுவாமி தரிசனத்துக்கு சுமாா் 3 மணி நேரமானது. சின்னக்குமாரசாமி தங்கமயில் வாகனத்தில் உள்பிரகாரம் உலா எழுந்தருளினாா். தங்கத் தோ், தங்க மயில் புறப்பாட்டில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்றனா்.