கோப்புப் படம்
திண்டுக்கல்
ரயிலில் அடிபட்டு பெண் உயிரிழப்பு
திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே வெள்ளிக்கிழமை ரயிலில் அடிபட்டு பெண் உயிரிழந்தாா்.
மேட்டுப்பாளையத்திலிருந்து தூத்துக்குடி செல்லும் ரயில் வெள்ளிக்கிழமை பழனியை அடுத்த கோதைமங்கலம் பகுதியில் வந்து கொண்டிருந்தது. அப்போது, 60 வயது மதிக்கத்தக்க பெண் அந்த ரயிலில் அடிப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இறந்த பெண் யாா், எந்த ஊரைச் சோ்ந்தவா் என்ற விபரம் தெரியவில்லை.
இதுகுறித்து பழனி ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

