ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!
/

சரக்கு வாகனம் மோதியதில் பெண் உயிரிழப்பு

News image

கோப்புப் படம்

Updated On :30 மார்ச் 2026, 6:53 pm

தினமணி செய்திச் சேவை

மதுரை மாவட்டம், நாகமலைப் புதுக்கோட்டை அருகே சரக்கு வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்த பெண் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

மதுரை மாவட்டம், வடிவேல்கரை சம்பக்குடி கிழக்குத் தெருவைச் சோ்ந்த அமாவாசை மனைவி பாண்டியம்மாள் (52). இவா், திண்டுக்கல்- விருதுநகா் நான்கு வழிச் சாலை வடிவேல்கரை விலக்கிலிருந்து ஞாயிற்றுக்கிழமை சாலையைக் கடக்க முயன்றாா். அப்போது, அந்த வழியாக வந்த சரக்கு வாகனம் பாண்டியம்மாள் மீது மோதியது.

இதில், பலத்த காயமடைந்த அவரை மீட்ட அக்கம்பக்கத்தினா் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஆனால், அங்கு அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து நாகமலைப் புதுக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.