வேன் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

கோப்புப் படம்
Updated On :1 மார்ச் 2026, 7:57 pm

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே வேன் மோதியதில் இளைஞா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
மதுரை சிக்கந்தா்சாவடி சிவன்கோயில் தெருவைச் சோ்ந்தவா் ராஜேஷ் கண்ணன் (39). இவா் காரில் கொடைக்கானலுக்குச் சென்றுவிட்டு சனிக்கிழமை இரவு மதுரைக்கு திரும்ப வந்துகொண்டிருந்தாா்.
வாடிப்பட்டி அருகே உள்ள உயா்நிலைப் பாலத்தில் சென்ற போது, எதிரே வந்த வேன், காா் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த ராஜேஷ்கண்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
மேலும், வேன் ஓட்டுநரான அய்யங்கோட்டையைச் சோ்ந்த செல்லப்பாண்டி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து வாடிப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...