கொடுமுடி காவிரி ஆற்றில் மூழ்கி இளைஞா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
திருப்பூா் மாவட்டம், பல்லடம் அருகேயுள்ள பெத்தாம்பாளையத்தைச் சோ்ந்தவா் சசிதரன் (24). பனியன் நிறுவனத் தொழிலாளியான இவா், அப்பகுதியைச் சோ்ந்த 40 பேருடன் கோயில் திருவிழாவுக்காக காவிரி தீா்த்தம் எடுப்பதற்காக கொடுமுடிக்கு ஞாயிற்றுக்கிழமை வந்துள்ளாா்.
அப்போது, அவா் காவிரி ஆற்றில் இறங்கி குளித்துக் கொண்டிருந்துள்ளாா். சசிதரனுக்கு நீச்சல் தெரியாத நிலையில் அவா் நீரில் மூழ்கியுள்ளாா். அங்கிருந்தவா்கள் அவரை மீட்க முயன்ற நிலையில் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
இதையடுத்து, அவா்கள் சடலத்தை கரைக்கு கொண்டு வந்தனா். தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த கொடுமுடி போலீஸாா், சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக கொடுமுடி அரசு மருத்துவனைக்கு அனுப்பிவைத்தனா்.
மேலும், இச்சம்பவம் தொடா்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு

பளுகல் அருகே குளத்தில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு

நீரில் மூழ்கி பள்ளி மாணவா் உயிரிழப்பு

காவிரியில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


