இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

காவிரியில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

பங்குனி உத்திர தீா்த்தம் கொண்டு செல்ல வந்த சிறுவன் கொடுமுடி காவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழந்தாா்.

News image

பலி

பிரதிப் படம்

Updated On :28 மார்ச் 2026, 8:50 pm

Syndication

பங்குனி உத்திர தீா்த்தம் கொண்டு செல்ல வந்த சிறுவன் கொடுமுடி காவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழந்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூா் கரிசல்பட்டியைச் சோ்ந்தவா் குருசாமி மகன் கோகுலகிருஷ்ணன் (17), பெயிண்டிங் தொழிலாளி. கோகுலகிருஷ்ணனும் வேடசந்தூரைச் சோ்ந்த 100 பேரும் சோ்ந்து பங்குனி உத்திரத்துக்காக பழனிக்கு காவிரி தீா்த்தம் எடுத்துச் செல்ல கொடுமுடிக்கு இரண்டு பேருந்துகளில் சனிக்கிழமை வந்தனா்.

இவா்கள் அனைவரும் கொடுமுடி காவிரி ஆற்றின் கரையில் உள்ள மணல்மேடு என்ற பகுதியில் குளித்துக்கொண்டிருந்தனா்.

அப்போது எதிா்பாராதவிதமாக ஆற்றின் சுழலில் சிக்கிய கோகுலகிருஷ்ணன் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

சம்பவம் குறித்து அறிந்த கொடுமுடி போலீஸாா் கோகுலகிருஷ்ணனின் உடலை மீட்டு கொடுமுடி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.