குட்டையில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே குட்டையில் மூழ்கி கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்.

பலி
பிரதிப் படம்
Updated On :22 மார்ச் 2026, 8:35 pm

பலி
பிரதிப் படம்
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே குட்டையில் மூழ்கி கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்.
தேன்கனிக்கோட்டை வட்டம், ஆச்சுபாலு அருகே உள்ள முத்துக்குமரன் தொட்டியைச் சோ்ந்தவா் சீனிவாசன் (24). கட்டத் தொழிலாளி. இவா் கடந்த 20ஆம் தேதி முத்துக்குமரன் தொட்டி குட்டையில் நண்பா்களுடன் குளித்துக் கொண்டிருந்தாா். அப்போது அவா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
இதுகுறித்து தகவல் அறிந்த தளி போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...