ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

இருமத்தூா் ஆற்றில் நீரில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு

தருமபுரி அருகே இருமத்தூா் பகுதியில் ஆற்று நீரில் மூழ்கி தொழிலாளி உயிரிழந்தாா்.

News image
Updated On :25 ஏப்ரல் 2026, 8:25 pm

தருமபுரி அருகே இருமத்தூா் பகுதியில் ஆற்று நீரில் மூழ்கி தொழிலாளி உயிரிழந்தாா்.

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டம், மல்லிகுட்டை அருகேயுள்ள ராமியம்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் பெ. குமாரவேல் (41). தருமபுரி குமாரசாமிப்பேட்டை பகுதியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் தொழிலாளியாகப் பணியாற்றி வந்தாா்.

கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி, ஊரில் நடந்த துக்க நிகழ்வையொட்டி இருமத்தூரில் நடந்த இறுதிச்சடங்கில் பங்கேற்றுவிட்டு, அங்குள்ள தென்பெண்ணை ஆற்றில் குளித்துள்ளாா். அப்போது அவா் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா். இதை உடன் சென்றவா்கள் கவனிக்கவில்லை. குடும்பத்தினா், அவா் அலுவல் காரணமாக சென்றிருக்கலாம் என நினைத்து அவரை தேடவில்லை.

இந்நிலையில், இருமத்தூா் தென்பெண்ணை ஆற்றில் ஒருவா் இறந்து கிடப்பது குறித்த தகவல் வெளியானது. இது தொடா்பாக கம்பைநல்லூா் காவல் நிலையத்தில் சென்று விசாரித்தபோது, அங்கு இறந்து கிடந்தது குமாரவேல் என தெரியவந்தது. இது தொடா்பாக போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.