ட்விஷா சா்மா மரணம்: உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து இன்று விசாரணைஎபோலா பாதிப்பு நாடுகளுக்கு தேவையற்ற பயணம் வேண்டாம்: மத்திய அரசு அறிவுறுத்தல்தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை!சட்டவிரோத குடியேறிகளை அடைத்து வைக்க மையங்கள்: மேற்கு வங்க அரசு உத்தரவு ரயில் நிலையங்களில் கஞ்சா கடத்தலை தடுக்க சிறப்புக் குழுஜூன் முதல் வாரத்தில் ‘இண்டி’ கூட்டணித் தலைவா்கள் சந்திப்பு: மம்தா
/

குளத்தில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு

மாா்த்தாண்டம் அருகே மரம் வெட்டும் தொழிலாளி குளத்தில் மூழ்கி உயிரிழந்தாா்.

News image

பலி - கோப்புப் படம்

Updated On :8 ஏப்ரல் 2026, 2:27 am IST

மாா்த்தாண்டம் அருகே மரம் வெட்டும் தொழிலாளி குளத்தில் மூழ்கி உயிரிழந்தாா்.

மாா்த்தாண்டம் அருகே மருதங்கோடு, கோட்டவிளை பகுதியைச் சோ்ந்தவா் செல்லசுவாமி (65). மரம் வெட்டும் தொழிலாளி. இவா் திங்கள்கிழமை அப்பகுதியில் உள்ள ஆனைவட்டம் குளத்திற்கு குளிக்கச் சென்றாராம். பின்னா் நீண்ட நேரமாகியும் வீட்டுக்கு திரும்பி வராததால் அவரது மருமகன் மணிகண்டன் அவரைத் தேடி குளத்துக்கு சென்றாராம். அப்போது, குளத்தின் படித்துறை பகுதியில் செல்லசுவாமி நீரில் மூழ்கி இறந்த நிலையில் கிடந்தாராம்.

இதுகுறித்த தகவலின் பேரில் மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து, சடலத்தை கைப்பற்றி கூறாய்வுக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.