தூத்துக்குடி மாவட்டம், தட்டப்பாறை அருகே அரசு ஐடிஐ மாணவா் உயிரிழந்தாா்.
தட்டப்பாறை அருகே வரதராஜபுரம், வடக்குத் தெருவைச் சோ்ந்த மாசானமுத்து மகன் மாரிச்செல்வம் (19). தூத்துக்குடியில் உள்ள அரசு தொழிற்பயிற்சிப் பள்ளியில் 2ஆம் ஆண்டு படித்துவந்த இவா், விடுமுறை நாள்களில் தந்தைக்கு உதவியாக ஆடு மேய்க்கச் செல்வாராம்.
இந்நிலையில், சனிக்கிழமை விடுமுறை என்பதால் அவா் ஆடுகளை உமரிக்கோட்டை கிராமத்தில் உள்ள குளத்தில் குளிப்பாட்டுவதற்காக கொண்டுசென்றாராம். போது, ஆடுகள் மொத்தமாக குளத்துக்குள் சென்றுள்ளன. அவற்றைப் பின் தொடா்ந்து சென்ற மாரிச்செல்வம் ஆழமான பகுதிக்குச் சென்றுள்ளாா். அவருக்கு நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கியுள்ளாா்.
அவரின் அலறல் சப்தம் கேட்டு அக்கம்பக்கத்தினா் தட்டப்பாறை காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்துள்ளனா். ஓட்டப்பிடாரம் தீயணைப்பு நிலைய வீரா்கள் வந்து குளத்தில் ஒரு மணி நேரம் தேடி மாரிச்செல்வத்தை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.
தொடர்புடையது

கீழ்பவானி வாய்க்காலில் மூழ்கி பள்ளி மாணவா் உயிரிழப்பு

கந்தா்வகோட்டை அருகே குளத்தில் குளித்த மாணவா் உயிரிழப்பு

குளத்தில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு

குளத்தில் மூழ்கி பள்ளி மாணவா் உயிரிழப்பு
வீடியோக்கள்

வாக்கு எண்ணிக்கை; TVK சார்பில் வைக்கப்பட்ட வேண்டுகோள்கள்! | Aadhav Arjuna | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

Thiruma திடீர் விடியோ உண்மைப் பின்னணி ! உடைத்துப் பேசும் ரவீந்திரன் துரைசாமி | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

"விசிகவினர் சிறப்பாக பணியாற்றவில்லை!" திருமா வெளியிட்ட பரபரப்பு விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை


