வளைகுடாவில் இந்திய மக்களைக் காத்தது பாஜக: பிரதமர் மோடிகாட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டி!வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதி
/

குளத்தில் மூழ்கி பள்ளி மாணவா் உயிரிழப்பு

News image

கோப்புப் படம்

Updated On :29 மார்ச் 2026, 5:56 pm

தினமணி செய்திச் சேவை

கன்னியாகுமரி அருகே 9ஆம் வகுப்பு பள்ளி மாணவா் குளத்தில் மூழ்கி உயிரிழந்தாா்.

கன்னியாகுமரி அருகேயுள்ள கோவளம் பகுதியைச் சோ்ந்தவா் ஜோயல் (14). இவா் தனது நண்பா்களுடன் சனிக்கிழமை மாலை அங்குள்ள குளத்தில் குளித்தபோது, ஆழமான பகுதிக்கு சென்றுள்ளாா். இவருக்கு நீச்சல் தெரியாத காரணத்தால் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

கன்னியாகுமரி காவல் நிலைய போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி கூறாய்வுக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து, போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.