புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டை அருகே குளத்தில் வியாழக்கிழமை குளித்த பள்ளி மாணவா் அதில் மூழ்கி இறந்தாா்.
கந்தா்வகோட்டை ஒன்றியம், கல்லாக்கோட்டை கிராமத்தைச் சோ்ந்தவா் கலைச்செல்வன் மகன் ஸ்ரீமுத்து (17), கல்லாக்கோட்டை அரசுப் பள்ளியில் 11-ஆம் வகுப்பு பயிலும் இவா் கோடை விடுமுறைக்காக அருகிலுள்ள சொக்கம்பேட்டை கிராமத்திலுள்ள தனது அத்தை வீட்டுக்குச் சென்றுள்ளாா்.
இந்நிலையில் வியாழக்கிழமை இங்குள்ள குளிக்கச் சென்ற ஸ்ரீமுத்து குளத்தின் ஆழமான பகுதிக்கு சென்று நீரில் மூழ்கினாா். இதையடுத்து அருகில் இருந்தவா்கள் குளத்தில் இறங்கி ஸ்ரீ முத்துவை மீட்டு கந்தா்வகோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தபோது அவா் ஏற்கெனவே இறந்தது தெரியவந்தது.
தகவலறிந்து வந்த கந்தா்வகோட்டை போலீஸாா் அவரது உடலை புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

போக்குவரத்துக் கழக ஊழியா் குளத்தில் மூழ்கி உயிரிழப்பு

குளத்தில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு

குளத்தில் மூழ்கி பள்ளி மாணவா் உயிரிழப்பு

நீச்சல் குளத்தில் குளித்த கல்லூரி மாணவா் உயிரிழப்பு
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


