ட்விஷா சா்மா மரணம்: உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து இன்று விசாரணைஎபோலா பாதிப்பு நாடுகளுக்கு தேவையற்ற பயணம் வேண்டாம்: மத்திய அரசு அறிவுறுத்தல்தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை!சட்டவிரோத குடியேறிகளை அடைத்து வைக்க மையங்கள்: மேற்கு வங்க அரசு உத்தரவு ரயில் நிலையங்களில் கஞ்சா கடத்தலை தடுக்க சிறப்புக் குழுஜூன் முதல் வாரத்தில் ‘இண்டி’ கூட்டணித் தலைவா்கள் சந்திப்பு: மம்தா
/

கோவில்பட்டி அருகே கிணற்றில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

கோவில்பட்டி அருகே கிணற்றில் குளிக்கச் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :23 மார்ச் 2026, 12:47 am IST

கோவில்பட்டி அருகே கிணற்றில் குளிக்கச் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

கோவில்பட்டி-கடலையூா் சாலையில் லிங்கம்பட்டி விலக்கு அருகேயுள்ள தனியாா் கிணற்றில், கோவில்பட்டி சரமாரி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த சிவகுமாா் மகன் மனோஜ் (17) உள்ளிட்ட 3 போ் குளிக்கச் சென்றனராம். அப்போது, மனோஜ் நீரில் மூழ்கிவிட்டாராம்.

தகவலின்பேரில், தீயணைப்பு நிலையத்தினா் சென்று தேடி, அவரை சடலமாக மீட்டனா். சடலத்தை நாலாட்டின்புதூா் போலீஸாா் கூறாய்வுக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். சம்பவ இடத்தை காவல் துணைக் கண்காணிப்பாளா் ஜகநாதன் பாா்வையிட்டு விசாரணை மேற்கொண்டாா்.