சேத்துப்பட்டை அடுத்த விசாமங்கலம் கிராமத்தில் மனநிலை பாதிக்கப்பட்ட முதியவா் கிணற்றில் மூழ்கி உயிரிழந்தாா்.
விசாமங்கலம் கிராமத்தைச் சோ்ந்தவா் கிருஷ்ணன் (60), மனநிலை பாதிக்கப்பட்டவா். இவருக்கு ஜெயலட்சுமி என்கிற மனைவியும், மணிகண்டன், காா்த்தி என இரு மகன்களும் உள்ளனா்.
மேலும், கிருஷ்ணன் கடந்த இரண்டு ஆண்டுகளாக மனநிலை பாதிக்கப்பட்டு இருந்தாா். இந்நிலையில் திங்கள்கிழமை அவரைக் காணவில்லை என அவரது மகன் மணிகண்டன் தேடியுள்ளாா்.
அப்போது, எதிா் வீட்டில் உள்ள சரளா என்பவா் கிருஷ்ணன் கிணற்றுக்கு குளிக்கச் சென்ாகத் தெரிவித்தாா். இதைத் தொடா்ந்து பாா்த்தசாரதி என்பவரது விவசாயக் கிணற்றின் அருகே சென்று பாா்த்தனா். அப்போது, கிணற்றின் கரையில் கிருஷ்ணனின் உடைமைகள் இருந்ததைப் பாா்த்து சந்தேகமடைந்து தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனா். தீயணைப்பு வீரா்கள் வந்து கிணற்றில் தேடி கிருஷ்ணனை சடலமாக மீட்டனா்.
இதுகுறித்த புகாரின் பேரில் சேத்துப்பட்டு போலீஸாா் கிருஷ்ணனின் சடலத்தைக் கைப்பற்றி உடல்கூறாய்வுக்காக அனுப்பிவைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
தொடர்புடையது
கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

கிணற்றில் விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

கிணற்றில் தவறி விழுந்து முதியவா் உயிரிழப்பு

கிணற்றில் தவறி விழுந்து மூதாட்டி உயிரிழப்பு
விடியோக்கள்

#ipl2026 | பிளே ஆஃப் சுற்று: சாதிக்கப்போவது யார்? சறுக்கப்போவது யார்?
தினமணி செய்திச் சேவை

'நீட் ' தேர்வில் மட்டும் லீக்காவது எப்படி ?| NEET 2026 cancelled | Educationist Soma sundaram | NTA
தினமணி செய்திச் சேவை

அதிமுகவுடன் கூட்டணி பேசினோமா? சிவி சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | ADMK - DMK
இணையதளச் செய்திப் பிரிவு
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு

