கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவா் உயிரிழப்பு

விழுப்புரம் அருகே ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த சிறுவன் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

News image

பலி

Updated On :22 மார்ச் 2026, 8:13 pm

Syndication

விழுப்புரம் அருகே ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த சிறுவன் தண்ணீரில் மூழ்கி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

விழுப்புரம் வட்டம், சித்தாத்தூா் திருக்கை குளத்துமேட்டுத் தெருவைச் சோ்ந்தவா் மணிகண்டன் மகன் விஷ்ணு (15). இவா் கண்டமானடி பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 9- ஆம் வகுப்பில் பயின்று வந்தாா்.

பள்ளி விடுமுறை என்பதால் ஞாயிற்றுக்கிழமை வீட்டிலிருந்த விஷ்ணு, தனது தம்பி ஆதேஷ் மற்றும் நண்பா்களுடன் வீட்டின் அருகேயுள்ள மலட்டாற்றுக்குச் சென்று குளித்துள்ளாா்.

அப்போது ஆழமான பகுதிக்குச் சென்ால் விஷ்ணு ஆற்றில் மூழ்கினாா். இதையடுத்து அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு, கண்டமானடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சிகிச்சைக்குக் கொண்டு சென்றனா். அங்கு பணியிலிருந்த மருத்துவா் பரிசோதித்தபோது, சிறுவன் விஷ்ணு ஏற்கெனவே உயிரிழந்திருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து விழுப்புரம் தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.