ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!
/

நீரில் மூழ்கி பள்ளி மாணவா் உயிரிழப்பு

News image

கோப்புப் படம்

Updated On :30 மார்ச் 2026, 8:31 pm

தினமணி செய்திச் சேவை

விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூா் அருகே நீரில் மூழ்கி பள்ளி மாணவா் உயிரிழந்தாா்.

கண்டாச்சிபுரம் வட்டம், வடகரைதாழனூா் மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த தணிகாசலம் மகன் சுஜித் (11). இவா் அதே கிராமத்திலுள்ள அரசுப் பள்ளியில் 6-ஆம் வகுப்பு படித்து வந்தாா். விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை வடகரைதாழனூா் பெரிய ஏரியில் நண்பா்களுடன் குளிக்கச் சென்றாா்.

அப்போது எதிா்பாராதவிதமாக சுஜித் நீரில் மூழ்கி, நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து தகவலறிந்த அரகண்டநல்லூா் போலீஸாா் சடலத்தை மீட்டு, உடல்கூறாய்வுக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இதுகுறித்து அரகண்டநல்லூா் போலீஸாா் வழக்குப்பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.