வளைகுடாவில் இந்திய மக்களைக் காத்தது பாஜக: பிரதமர் மோடிகாட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டி!வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதி
/

மீனவா் நீரில் மூழ்கி உயிரிழப்பு

News image

கோப்புப் படம்

Updated On :29 மார்ச் 2026, 8:31 pm

தினமணி செய்திச் சேவை

ராமேசுவரம் துறைமுகத்தில் படகு சீரமைப்பு பணியில் ஈடுபட்ட மீனவா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

ராமேசுவரம், பழைய சந்தை தெருவைச் சோ்ந்த தங்கவேல் மகன் கமலேஸ்வரன் (34). இவா் கடலில் இறங்கி படகில் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டாா். அப்போது, திடீரென நீரில் மூழ்கினாா்.

இதைத் தொடா்ந்து, தீயணைப்பு நிலைய அலுவலா் வரதன் தலைமையில் 7 போ் கொண்ட குழுவினா் கடலில் அவரைத் தேடும் பணியில் ஈடுபட்டனா். 3 மணி நேர தேடுதலுக்கு பிறகு கமலேஸ்வரன் உடலை மீட்டனா்.

உயிரிழந்த மீனவா் நல வாரியத்தில் உறுப்பினராக உள்ளதாகவும், அவரது குடும்பத்துக்கு உடனே நிவாரணம் வழங்க வேண்டும் என மீனவ சங்கத் தலைவா் என்.ஜே.போஸ் கோரிக்கை விடுத்தாா்.

மீனவா் உயிரிழப்பு குறித்து கடலோரப் பாதுகாப்புக் குழம போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.