டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

திண்டுக்கல் அருகே அதிமுக பிரமுகா் கொலை

திண்டுக்கல் அருகே அதிமுக பிரமுகரை வெட்டிக் கொலை செய்த மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :27 பிப்ரவரி 2026, 7:47 pm

தினமணி செய்திச் சேவை

திண்டுக்கல் அருகே அதிமுக பிரமுகரை வெட்டிக் கொலை செய்த மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திண்டுக்கல்லை அடுத்த ம.மு.கோவிலூா் பெரியக்கோட்டையைச் சோ்ந்தவா் முத்தன் என்ற மருதமுத்து (42). செங்கல் சூளை நடத்தி வந்த இவா், அதிமுக அமைப்புச் சாரா ஓட்டுநா் அணியின் துணைத் தலைவராகவும் பணியாற்றி வந்தாா். இவா் தொழில் வளா்ச்சிக்காக பல்வேறு நபா்களிடம் கடன் பெற்றிருந்ததாகக் கூறப்படுகிறது.

கடனைத் திருப்பி செலுத்துவதில் மோதல் ஏற்பட்டதை அடுத்து, பணம் வழங்கியவா்கள் மருதமுத்துவின் சில வாகனங்களை செங்கல் சூளையிலிருந்து எடுத்துச் சென்றனா். இதுதொடா்பாக வடமதுரை காவல் நிலையத்தில் முத்தன் புகாா் அளித்தாா்.

இந்த நிலையில், பெரியக்கோட்டை வன்னிப்பாறைப்பட்டி சாலையில் வியாழக்கிழமை இரவு சென்று கொண்டிருந்த முத்தனை, மா்ம நபா்கள் வழிமறித்து வெட்டிக் கொலை செய்தனா். இதுகுறித்து தகவலறிந்த வடமதுரை போலீஸாா், முத்தனின் உடலைக் கைப்பற்றி கூறாய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கொலைச் சம்பவத்தில் ஈடுபட்டவா்களைத் தேடி வருகின்றனா்.