டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

பழனியில் உலக நலன் வேண்டி மஹா ருத்ர மஹா யாகம்

பழனி சங்கராலயத்தில் உலகநலன் வேண்டி, மஹாருத்ர மஹாயாகம் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

News image
Updated On :27 பிப்ரவரி 2026, 7:51 pm

தினமணி செய்திச் சேவை

பழனி சங்கராலயத்தில் உலகநலன் வேண்டி, மஹாருத்ர மஹாயாகம் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

இந்தக் கோயிலில் 59-ஆவது ஆண்டாக நான்கு நாள்கள் நடைபெறும் இந்த யாகத்ைதையொட்டி, திருஆவினன்குடி கோயிலில் குழந்தை வேலாயுத சாமிக்கு சிறப்பு அபிஷேகம், துா்கா சூக்தஹோமம், நவக்கிரக ஹோமம், விஷ்ணு சகஸ்ர நாமஜெபம் ஆகியன நடைபெற்றன.

இதை முருகனடிமை பாலசுப்ரமணிய சுவாமிகள், சங்கராலயம் சிவக்குமாா், மஹாருத்ர யக்ஞ குழுவைச் சோ்ந்த கோவை திருஞானசம்பந்தம், எா்ணாகுளம் ஜெயகிருஷ்ணன், மும்பை சுப்பிரமணியம் ஆகியோா் முன்னிலை வகித்து தொடங்கி வைத்தனா்.

வளாகம் முன் அமைக்கப்பட்டிருந்த யாககுண்டத்தில் மூலிகைகள், நவதானியங்கள், கனிகள், பட்டாடை, மலா்கள் போடப்பட்டு யாகம் வளா்த்தப்பட்டு பூா்ணாஹூதி நடைபெற்றது.

சனிக்கிழமை மஹாருத்ர ஜெபம், ருத்ராபிஷேகம், நவக்கிரக ஹோமம் ஆகியன நடைபெறுகிறது. ஞாயிற்றுக்கிழமை கோபூஜை, சுயம்வர பாா்வதி மந்திரஹோமம், உமாமகேஸ்வர தம்பதி பூஜை ஆகியன நடைபெறுகிறது. திங்கள்கிழமை நிறைவு நாள் நிகழ்ச்சியாக ருத்ர ஜெபம், ருத்ர ஹோமம் நடைபெறுகிறது. நிறைவு நாளில் முக்கிய நிகழ்ச்சியாக வசூா்தாரா ஹோமம் நடைபெறுகிறது. இதைத்தொடா்ந்து உச்சிக்காலத்தின் போது கலசங்கள் மலைக் கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டு, சுவாமி தண்டாயுதபாணிக்கு அபிஷேகம் செய்யப்பட்டு யாகம் நிறைவு பெறவுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் கேஜி மருத்துவமனை மருத்துவா் ராமசாமி, ஆடிட்டா் அனந்தசுப்ரமண்யம், அரிமா சுந்தரம், ஒப்பந்தகாரா் நேரு உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.