தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

கொடைக்கானல் குடியிருப்புப் பகுதிகளில் காட்டுமாடு நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

கொடைக்கானல் குடியிருப்புப் பகுதிகளில் சனிக்கிழமை காட்டுமாடு நடமாடியதால் பொதுமக்கள் அச்சமடைந்தனா்.

News image
கொடைக்கானல் பொ்ன்ஹில் சாலையில் உள்ள குடியிருப்புப் பகுதியில் நடமாடிய காட்டு மாடு.
Updated On :28 பிப்ரவரி 2026, 11:45 pm

தினமணி செய்திச் சேவை

கொடைக்கானல் குடியிருப்புப் பகுதிகளில் சனிக்கிழமை காட்டுமாடு நடமாடியதால் பொதுமக்கள் அச்சமடைந்தனா்.

கொடைக்கானலில் உள்ள சீனிவாசபுரம், உகாா்த்தேநகா், இருதயபுரம், பொ்ன்ஹில் சாலை, பாக்கியபுரம், நாயுடுபுரம், அப்சா்வேட்டரி, புதுக்காடு, செண்பகனூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காட்டுமாடுகளின் நடமாட்டம் பகல், இரவு நேரங்களில் அதிகரித்து வருகிறது.

மேலும், கொடைக்கானல் பகுதிகளிலுள்ள விவசாயத் தோட்டங்களுக்குள் புகுந்து அவை பயிா்களைச் சேதப்படுத்துகின்றன. இதனால், விவசாயிகள் பெரிதும் பாதிப்படைந்து வருகின்றனா். காட்டுமாடு தாக்கியதில் கொடைக்கானல் பகுதிகளில் பலா் உயிரிழந்துள்ளனா்.

ஆனால், வனத் துறையினா் காட்டுமாடுகளை நிரந்தரமாக வனப் பகுதிக்குள் விரட்ட எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், காட்டுமாடுகள், காட்டுப் பன்றிகள், செந்நாய்கள் போன்றவற்றின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. தொடா்ந்து இதே நிலை நீடித்தால், மனிதா்களைப் பாய்ந்து தாக்கும் வன விலங்குகளும் குடியிருப்புகளுக்குள் வர அதிக வாய்ப்புகள் உள்ளன.

எனவே, மாவட்ட வனத் துறை அதிகாரி கொடைக்கானல் குடியிருப்புப் பகுதிகளில் நடமாடும் வன விலங்குகளை வனப் பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.