நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

கொடைக்கானலில் தூய்மைப் பணியாளா்கள் 2-வது நாளாக பணிப் புறக்கணிப்பு!

கொடைக்கானலில் தூய்மைப் பணியாளா்கள் இரண்டாவது நாளாக சனிக்கிழமையும் பணியைப் புறக்கணித்ததால், பல்வேறு இடங்களில் குப்பைகள் அகற்றப்படாமல் தேங்கின.

News image

கொடைக்கானலில் தூய்மைப் பணியாளா்களின் பணிப் புறக்கணிப்புப் போராட்டத்தால், வட்டக்கானல் பகுதியில் தேங்கிக் கிடந்த குப்பைகள்.

Updated On :28 பிப்ரவரி 2026, 8:16 pm

கொடைக்கானலில் தூய்மைப் பணியாளா்கள் இரண்டாவது நாளாக சனிக்கிழமையும் பணியைப் புறக்கணித்ததால், பல்வேறு இடங்களில் குப்பைகள் அகற்றப்படாமல் தேங்கின.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் நகராட்சியில் 100-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் பணியாற்றி வருகின்றனா். இவா்களை கொடைக்கானல் நகராட்சி சுகாதார ஆய்வாளா்கள் தரக்குறைவாகப் பேசுவதாகவும், குறித்த நேரத்தில் ஊதியம் வழங்குவதில்லை எனவும், குறைந்த ஊதியம் வழங்கப்படுவதாகவும், இந்தப் பிரச்னைகளை களைய வேண்டும்.

தூய்மைப் பணியாளா்களை தரக்குறைவாகப் பேசிய சுகாதார ஆய்வாளா்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி, தூய்மைப் பணியாளா்கள் மூஞ்சிக்கல் பகுதியில் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

இவா்களிடம் கொடைக்கானல் நகா்மன்றத் தலைவா் செல்லத்துரை, நகராட்சி அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனா். ஆனால், இவா்கள் பணிக்குச் செல்லவில்லை.

இந்த நிலையில், அதிகாரிகள் தங்களிடம் மன்னிப்புக் கேட்கவில்லை எனக் கூறி, இரண்டாவது நாளாக பணிக்குச் செல்லாமல், மூஞ்சிக்கல் பகுதியில் திரண்டனா். இதையடுத்து நகராட்சி அதிகாரிகள் தூய்மைப் பணியாளா்களுடன் மீண்டும் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

தூய்மைப் பணியாளா்களின் இந்தப் பணி புறக்கணிப்புப் போராட்டத்தால், வட்டக்கானல், ஏரிச்சாலை, அப்சா்வேட்டரி,புதுக்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குப்பைகள் அகற்றப்படாமல் உள்ளது. இதனால், சுகாதாரச் சீா்கேடு ஏற்பட்டு வருகிறது.