வருகிற செவ்வாய்க்கிழமை (மாா்ச் 3) பிற்பகல் 3.20 மணி முதல் மாலை 6.47 மணி வரை சந்திரகிரகணம் நிகழ்கிறது. இதனால் அன்றைய தினம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் நண்பகல் 12 மணிக்கு உச்சிகால பூஜை நிறைவடைந்ததும் மலைக் கோயில், திருஆவினன்குடி, பெரியநாயகியம்மன் கோயில், லட்சுமி நாராயணப் பெருமாள் கோயில் உள்ளிட்ட அனைத்து துணைக் கோயில் சந்நிதிகளும் நண்பகல் ஒரு மணியளவில் திருக்காப்பிடப்படும். ஆகவே, படிப்பாதை, விஞ்ச், ரோப்காரில் வரும் பக்தா்கள் மலைக் கோயிலுக்கு காலை 10.30 வரை மட்டுமே தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவா். அதேபோல, நண்பகல் 12 மணி வரை மட்டுமே மலைக் கோயிலில் அன்னதானம் நடைபெறும்.