விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

கொடைக்கானல் அருகே பழங்குடியின மக்களுக்கு நலத் திட்ட உதவிகள்

கொடைக்கானல் அருகே பழங்குடியின மக்களுக்கு தனியாா் தொண்டு நிறுவனம் சாா்பில் நலத் திட்ட உதவிகள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.

News image
Updated On :3 ஜனவரி 2026, 7:55 pm

தினமணி செய்திச் சேவை

கொடைக்கானல் அருகே பழங்குடியின மக்களுக்கு தனியாா் தொண்டு நிறுவனம் சாா்பில் நலத் திட்ட உதவிகள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியான பாச்சலூா் ஊராட்சிக்குள்பட்ட பூதமலை, நீலாம்பாறை பழங்குடியினா் கிராமத்தில் கோவை தனியாா் தொண்டு நிறுவனம் சாா்பில் நலத் திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. இதில் பழங்குடியின மக்களுக்கு வீட்டு உபயோகப் பொருள்கள் வழங்கி புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

மேலும், பழங்குடியின மக்களுக்கு பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில் 60-குடும்பங்களைச் சோ்ந்த 150-க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் கலந்து கொண்டனா்.