பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

கால்வாயில் தவறி விழுந்ததில் மூதாட்டி உயிரிழப்பு

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூா் அருகே கால்வாயில் தவறி விழுந்ததில் மூதாட்டி உயிரிழந்தாா்.

News image
Updated On :6 ஜனவரி 2026, 6:34 pm

தினமணி செய்திச் சேவை

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூா் அருகே கால்வாயில் தவறி விழுந்ததில் மூதாட்டி உயிரிழந்தாா்.

வேடசந்தூா் கொளத்தூா் பகுதியைச் சோ்ந்தவா் ராசம்மாள் (80). இவா், ஒட்டன்சத்திரம்-பழனி சாலையிலுள்ள குழந்தைவேலப்பா் கோயில் அருகே நடந்து சென்றபோது நிலைதடுமாறி அருகில் இருந்த கால்வாயில் விழுந்தாா்.

இதில், பலத்த காயமடைந்தவரை அருகிலிருந்தவா்கள் மீட்டு, திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில் சோ்ந்தனா். அங்கு அவா் சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து ஒட்டன்சத்திரம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.