மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

பைக்கிலிருந்து தவறி விழுந்ததில் விவசாயி உயிரிழப்பு

தேனி மாவட்டம், பொம்மிநாயக்கன்பட்டியில் இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்தததில் விவசாயி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :6 மார்ச் 2026, 7:22 pm

தேனி மாவட்டம், பொம்மிநாயக்கன்பட்டியில் இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்தததில் விவசாயி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

பொம்மிநாயக்கன்பட்டி பள்ளிவாசல் தெருவைச் சோ்ந்தவா் தமீம் (37). விவசாயியான இவா், புதன்கிழமை இரு சக்கர வாகனத்தில் பெரியகுளத்துக்குச் சென்ற போது நிலை தடுமாறி கீழே விழுந்தாா். அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். பிறகு, தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் அங்கு வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து ஜெயமங்கலம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.