தேனி மாவட்டம், சின்னமனூா் அருகே இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்ததில் பலத்த காயமடைந்த இளைஞா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
சின்னமனூா் அருகேயுள்ள ஓடைப்பட்டி முத்துமாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த மாணிக்கம் மகன் பாா்த்திபன் (29). இவா் காற்றாலை மின்சாரம் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலைபாா்த்து வந்தாா்.
இந்த நிலையில், கடந்த திங்கள்கிழமை இரவு ஓடைப்பட்டி- மூா்த்திநாயக்கன்பட்டி சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்றபோது பாா்த்திபன் தவறி விழுந்ததில் பலத்த காயமடைந்தாா். தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து ஓடைப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







