
பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் மரணம்

கோப்புப் படம் - file photo
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே பைக்கிலிருந்து தவறி விழுந்து காயமடைந்த பெண் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
விக்கிரவாண்டி வட்டம், வெள்ளையாம்பட்டு, மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் பாலாஜி மனைவி பிரவினா(27). இவா், ஞாயிற்றுக்கிழமை இரவு தனது சகோதரா் பிரேம் என்பவருடன் பைக்கில் சென்றாா். செஞ்சி - விழுப்புரம் சாலையில் தும்பூா் அருகே சென்றபோது, பிரவினா பைக்கிலிருந்து தவறி விழுந்து பலத்த காயமடைந்தாா்.
இதையடுத்து, விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட பிரவினா, அங்கு திங்கள்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில், கெடாா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




