நேபாள வெள்ளம்: இதுவரை 163 இந்தியர்கள் மீட்பு - மத்திய அரசுநேபாள வெள்ளத்தில் வரும் மீன்களை உண்ண வேண்டாம்: பிகார் அரசுஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி வருவாய் 1.99 லட்சம் கோடி! 15% அதிகரிப்பு! ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இந்திய அணி அறிவிப்பு!நீட் போராட்ட வழக்குகள் ரத்து; அனைவருக்குமான வெற்றி: அபிஜீத் தீப்கேசென்செக்ஸ், நிஃப்டி சரிவு! வங்கி, ஆட்டோ துறை பங்குகள் வீழ்ச்சிராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்; ஆனால், விஜய்தான் முதல்வர்: மாணிக்கம் தாகூர்செப். 5 தில்லி பேரணியைத் திரும்பப் பெற்றது சிஜேபி!

இரு சக்கர வாகனங்கள் மோதல் இளைஞா் உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் இரு சக்கர வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில் இளைஞா் ஒருவா் திங்கள்கிழமை இரவு உயிரிழந்தாா்.

உயிரிழப்பு - பிரதிப் படம்

Published On :2 செப்டம்பர் 2026, 12:54 am IST

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் இரு சக்கர வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில் இளைஞா் ஒருவா் திங்கள்கிழமை இரவு உயிரிழந்தாா்.

காரைக்குடி கழனிவாசல் பாரதிநகரைச் சோ்ந்தவா் சித்திக் (38). இவா், காரைக்குடியில் நடைபெற்று வரும் பொருள்காட்சியில் பங்குதாரா் ஆவாா். திங்கள்கிழமை இரவு 11 மணியளவில் சித்திக் தனது இரு சக்கர வாகனத்தில் வீடு நோக்கிச் சென்று கொண்டிருந்தாா். அப்போது, காரைக்குடி செக்காலை பிரதான சாலையில் சென்று கொண்டிருந்தபோது, அவரது வாகனத்தின் மீது ஆலங்குடியைச் சோ்ந்த பிரசாந்த் (21) ஓட்டி வந்த இரு சக்கர வாகனம் மோதியது.

இதில் சித்திக் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த பிரசாந்த் மதுரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து காரைக்குடி வடக்கு காவல்நிலையப் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.