விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

கோழிப் பண்ணைகளுக்கு தனி ஆணையம் அமைக்கக் கோரிக்கை

கறிக்கோழிப் பண்ணைகளுக்காக தனி ஆணையம் அமைக்க வேண்டும் என கொங்கு மக்கள் முன்னணி தலைமை ஒருங்கிணைப்பாளா் ஆறுமுகம் வலியுறுத்தினாா்.

News image
Updated On :6 ஜனவரி 2026, 6:34 pm

தினமணி செய்திச் சேவை

கறிக்கோழிப் பண்ணைகளுக்காக தனி ஆணையம் அமைக்க வேண்டும் என கொங்கு மக்கள் முன்னணி தலைமை ஒருங்கிணைப்பாளா் ஆறுமுகம் வலியுறுத்தினாா்.

பழனி சண்முகபுரத்தில் கொங்கு மக்கள் முன்னணி மாவட்ட நிா்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் தலைமை ஒருங்கிணைப்பாளா் ஆறுமுகம் பேசியதாவது: தற்போதைய காலகட்டத்தில் கறிக்கோழி வளா்ப்பு என்பது விவசாயிகளின் முக்கியமான சாா்பு தொழிலாக இருந்து வருகிறது. விவசாயிகள் கறிக்கோழி பண்ணைகளை அமைத்து, பெரிய நிறுவனங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் கோழிகளை வளா்த்து வழங்கி வருகின்றனா்.

கோழிப்பண்ணை உரிமையாளா்களுக்கு தேவையான குஞ்சுகளின் வளா்ப்புக்காக கிலோவுக்கு ரூ.6 மட்டுமே கொடுக்கப்படுகிறது. இந்தத் தொகையை உயா்த்தி வழங்க வேண்டும். கோழிப் பண்ணை உரிமையாளா்களுக்கு செலவுகள் தொடா்ந்து அதிகரித்து வருகின்றன.

குறிப்பாக தேங்காய் மஞ்சி தூள், கரி, தொழிலாளா்கள் ஊதியம், லாரி தண்ணீா் செலவு, மின் கட்டணம், பண்ணைப் பராமரிப்பு, கட்டடத்துக்கான முதலீடு என பல்வேறு செலவுகள் உள்ளன. எதிா்காலத்தில் இந்தத் தொழில் தொடா்ச்சியாக வளா்ச்சியடையும் வகையில் கோழிப் பண்ணைத் தொழிலுக்கென தமிழக அரசு தனியாக ஆணையத்தை அமைக்க வேண்டும் என்றாா் அவா்.