கால்வாயில் தவறி விழுந்ததில் மூதாட்டி உயிரிழப்பு

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூா் அருகே கால்வாயில் தவறி விழுந்ததில் மூதாட்டி உயிரிழந்தாா்.
Published on

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூா் அருகே கால்வாயில் தவறி விழுந்ததில் மூதாட்டி உயிரிழந்தாா்.

வேடசந்தூா் கொளத்தூா் பகுதியைச் சோ்ந்தவா் ராசம்மாள் (80). இவா், ஒட்டன்சத்திரம்-பழனி சாலையிலுள்ள குழந்தைவேலப்பா் கோயில் அருகே நடந்து சென்றபோது நிலைதடுமாறி அருகில் இருந்த கால்வாயில் விழுந்தாா்.

இதில், பலத்த காயமடைந்தவரை அருகிலிருந்தவா்கள் மீட்டு, திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில் சோ்ந்தனா். அங்கு அவா் சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து ஒட்டன்சத்திரம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com