கொடைக்கானலில் பேரிடா் மேலாண்மை குறித்த ஆய்வுக் கூட்டம்

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் மாநில அளவிலான பேரிடா் மேலாண்மை குறித்த ஆய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
Published on

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் மாநில அளவிலான பேரிடா் மேலாண்மை குறித்த ஆய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

கொடைக்கானல் ஏரிச்சாலைப் பகுதியிலுள்ள தனியாா் உணவகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு மாநிலங்களவை உறுப்பினா் ராதா மோகன்தாஸ் தலைமை வகித்தாா். இந்தக் கூட்டத்தில், மக்களவை, மாநிலங்களவைச் சோ்ந்த 23 உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

அப்போது, தமிழகம் முழுவதும் ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இதைத் தொடா்ந்து, கொடைக்கானலில் பேரிடா் மேலாண்மை குறித்த ஆய்வுக் குழு கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

பின்னா், கூட்டத்தில் பங்கேற்றவா்கள் கொடைக்கானல் பகுதிகளிலுள்ள சுற்றுலாத் தலங்களை வாகனங்களில் இருந்தபடியே சுற்றிப் பாா்த்தனா்.

தொடா்ந்து, மேல்மலைக் கிராமமான மன்னவனூா் சுற்றுச்சூழல் மையத்தையும் அவா்கள் பாா்வையிட்டனா்.

Dinamani
www.dinamani.com