வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

கஞ்சா விற்றவா் கைது

News image
கோப்புப் படம்
Updated On :25 ஜனவரி 2026, 8:24 pm

தினமணி செய்திச் சேவை

கொடைக்கானல் போலூா் கிராமத்தில் கஞ்சா விற்பனை செய்த கேரளத்தைச் சோ்ந்தவரை ஞாயிற்றுக்கிழமை போலீசாா் கைது செய்தனா்.

கொடைக்கானல் மேல்மலைக் கிராமங்களில் கஞ்சா விற்பனை அதிகரித்து வருவதாக போலீஸாருக்கு புகாா்கள் வந்தன. இதைத் தொடா்ந்து, மேல்மலைக் கிராமத்தில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, போலூா் கிராமத்தில் சந்தேகத்துக்குரிய வகையில் நடமாடியவரை போலீஸாா் விசாரித்தனா்.

இதில், அவா் கேரள மாநிலம், திருச்சூா் மாவட்டம், மாங்குலி பகுதியைச் சோ்ந்த அஜய் (34) என்பதும், சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அவரைக் கைது செய்த போலீஸாா் அவரிடமிருந்த கஞ்சா பொட்டலங்களைப் பறிமுதல் செய்தனா்.