முதல்வர் விஜய் அரசு வேலை வழங்கியிருப்பதும் ஒருவகை லஞ்சம்தான்: பாஜக36 குடும்பங்களில், வெறும் 31 பேருக்கு மட்டும் அரசுப் பணி ஏன்? டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து 95.32 ஆக நிறைவு!ஐடி பங்குகள் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 828 புள்ளிகளுடனும், நிஃப்டி 244 புள்ளிகள் உயர்வு!செந்தில் பாலாஜியின் வெற்றிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!செந்தில் பாலாஜிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!வங்கதேசம் திரும்பப் போவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு! திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு இடைக்காலத் தடை!
/

தாடிக்கொம்பு பகுதியில் மண் திருட்டு: மூவா் கைது

தாடிக்கொம்பு பகுதியில் மண் திருட்டில் ஈடுபட்ட மூவரை போலீஸாா் கைது செய்து, இரண்டு லாரிகளை பறிமுதல் செய்தனா்

News image
Updated On :11 ஜூலை 2026, 12:03 am IST

தாடிக்கொம்பு பகுதியில் மண் திருட்டில் ஈடுபட்ட மூவரை போலீஸாா் கைது செய்து, இரண்டு லாரிகளை பறிமுதல் செய்தனா்

திண்டுக்கல்லை அடுத்த தாடிக்கொம்பு பகுதியிலுள்ள குளங்களில் சிலா் மண் திருட்டில் ஈடுபடுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு புகாா் வந்தது. இதையடுத்து, மண் திருட்டில் ஈடுபடுவோா் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ச.ஜெயக்குமாா் உத்தரவிட்டாா்.

இதன்படி, தாடிக்கொம்பு போலீஸாா் கொடனகனாறு, இதைச் சுற்றியுள்ள குளங்களில் கண்காணிப்புப் பணியை தீவிரப்படுத்தினா்.

இந்த நிலையில், ஆலக்குவாா்பட்டி, ஓடைப்பட்டி குளத்தில் அனுமதியின்றி மண் திருட்டில் ஈடுபட்ட முருகன், கருப்பையா, முனியப்பன் ஆகிய 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

மேலும், மண் திருட்டுக்காக பயன்படுத்தப்பட்ட 2 லாரிகள், ஒரு பொக்லைன் இயந்திரம் ஆகியவற்றையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.