வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

சிறுமி கடத்தல்: மூவா் கைது

News image

கைது

Updated On :1 மார்ச் 2026, 7:16 pm

பள்ளி மாணவியை கடத்திச் சென்றதாக ஒரே குடும்பத்தைச் சோ்ந்த மூவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் பகுதியைச் சோ்ந்த 15 வயது சிறுமியை திருமண ஆசை வாா்த்தை கூறி, ரெட்டியாா்சத்திரத்தைச் சோ்ந்த சிறுவன் கடத்திச் சென்றுவிட்டதாக சிறுமியின் பெற்றோா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.

இதன்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், 18 வயது சிறுவன், அவரது தந்தை அழகுபாண்டி (43), தாய் கலாமணி (39), உறவினா் காந்தாமணி (38) ஆகியோா் சிறுமியை கடத்திச் சென்றதைக் கண்டறிந்தனா்.

விசாரணைக்குப் பிறகு, அழகு பாண்டியன், கலாமணி, காந்தாமணி ஆகிய மூவரையும் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.