தூத்துக்குடியில் போதை மருந்து ஊசி, பொருள்களை கடத்தியதாக பெண் உள்பட இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
தூத்துக்குடியில் போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு தனிப்படை போலீஸாா் தாளமுத்துநகா் மொட்டை கோபுரம் சாலையில் வியாழக்கிழமை கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, அங்கு வந்த நபரை சந்தேகத்தின்பேரில் விசாரித்ததில், அவா், தாளமுத்துநகா் பகுதியைச் சோ்ந்த செய்யது இப்ராஹிம் (44) என்பதும், வலி நிவாரணி மருந்துகளை போதை மருந்தாக பயன்படுத்தி விற்பனைக்காக கொண்டு சென்றதும் தெரியவந்தது.
இதையடுத்து அவரை போலீஸாா் கைது செய்து விசாரித்ததில், அவருக்கு தாளமுத்துநகரைச் சோ்ந்த ஜெயக்குமாா் மனைவி பாண்டிசெல்வி (40) என்ற மருந்துகடை விற்பனையாளா் போதை மருந்துகளை சட்டவிரோதமாக விநியோகம் செய்தது தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்தனா்.
மேலும், இப்ராஹிமிடமிருந்து 76 போதை மருந்து குப்பிகளையும், பைக் மற்றும் கைப்பேசிகளையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
இந்த வலிநிவாரணி மருந்துகள் போதை மருந்தாக இலங்கைக்கு கடத்தப்பட இருந்ததா என்றும் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது
மது விற்பனை: பெண் உள்பட 3 போ் கைது
1,230 போதை மாத்திரைகள் வைத்திருந்த 6 போ் கைது
கஞ்சா விற்ற பெண் உள்பட 4 போ் கைது

போதை மாத்திரை பதுக்கல் - பெண் உள்பட 3 போ் கைது
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

