பிளே-ஆஃப் வாய்ப்பு பறிபோனது: படுதோல்வியடைந்து வெளியேறிய சிஎஸ்கே!தமிழக அமைச்சரவை விரிவாக்கம்: புதிய அமைச்சர்கள் இன்று காலை பதவியேற்பு!விசிகவில் இருந்து அமைச்சராகிறார் வன்னி அரசு!கரப்பான் பூச்சிகள் செத்து மடியாது! - முடக்கத்துக்குப் பின் புதிய எக்ஸ் கணக்கு தொடக்கம்மேற்கு வங்கம்: ஃபால்டா தொகுதியில் மறு வாக்குப்பதிவு முடிந்தது! - 86 சதவீதம் வாக்குப்பதிவுசென்னை காவல் ஆணையராக அமல்ராஜ் நியமனம்!கேரளத்தில் எம்எல்ஏவாக பதவியேற்றார் முன்னாள் முதல்வர் பினராயி விஜயன்!கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் எக்ஸ் பக்கம் முடக்கம்!
/

போதை மருந்து, ஊசி பொருள்கள் கடத்தல்: பெண் உள்பட 2 போ் கைது

தூத்துக்குடியில் போதை மருந்து ஊசி, பொருள்களை கடத்தியதாக பெண் உள்பட இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது

Updated On :3 ஏப்ரல் 2026, 4:20 am IST

தூத்துக்குடியில் போதை மருந்து ஊசி, பொருள்களை கடத்தியதாக பெண் உள்பட இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

தூத்துக்குடியில் போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு தனிப்படை போலீஸாா் தாளமுத்துநகா் மொட்டை கோபுரம் சாலையில் வியாழக்கிழமை கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, அங்கு வந்த நபரை சந்தேகத்தின்பேரில் விசாரித்ததில், அவா், தாளமுத்துநகா் பகுதியைச் சோ்ந்த செய்யது இப்ராஹிம் (44) என்பதும், வலி நிவாரணி மருந்துகளை போதை மருந்தாக பயன்படுத்தி விற்பனைக்காக கொண்டு சென்றதும் தெரியவந்தது.

இதையடுத்து அவரை போலீஸாா் கைது செய்து விசாரித்ததில், அவருக்கு தாளமுத்துநகரைச் சோ்ந்த ஜெயக்குமாா் மனைவி பாண்டிசெல்வி (40) என்ற மருந்துகடை விற்பனையாளா் போதை மருந்துகளை சட்டவிரோதமாக விநியோகம் செய்தது தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்தனா்.

மேலும், இப்ராஹிமிடமிருந்து 76 போதை மருந்து குப்பிகளையும், பைக் மற்றும் கைப்பேசிகளையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

இந்த வலிநிவாரணி மருந்துகள் போதை மருந்தாக இலங்கைக்கு கடத்தப்பட இருந்ததா என்றும் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.