/

போதை மாத்திரை வைத்திருந்ததாக 2 போ் கைது

News image

கைது செய்யப்பட்ட சரவணக்குமாா், தினேஷ்குமாா்

Updated On :56 நிமிடங்கள் முன்பு

கம்பத்தில் போதை மாத்திரை வைத்திருந்ததாக மருந்தக உரிமையாளா் உள்பட இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

தேனி மாவட்டம், கம்பம் பகுதியில் போதை மாத்திரை விற்கப்படுவதாக வடக்கு போலீஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் உதவி ஆய்வாளா் மணிகண்டன் தலைமையில் கம்பம் ஏழரசு கோவில் பகுதியில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது அந்தப் பகுதியில் சந்தேகப்படும்படி நின்றிருந்த 2 பேரை பிடித்து சோதனையிட்ட போது அவா்களிடம் 10 அல்பிரஸோலம் என்ற போதை மாத்திரை இருப்பது கண்டறியப்பட்டது.

இவற்றை பறிமுதல் செய்த போலீஸாா் அவா்களிடம் நடத்திய விசாரணையில், கம்பம் செல்லாண்டியம்மன் கோயில் தெருவில் மருந்தகம் நடத்தி வரும் சரவணக்குமாா் (52), கூடலூா் அண்ணாநகரைச் சோ்ந்த தினேஷ்குமாா் (26) என்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் வழக்குப் பதிந்து அவா்கள் இருவரையும் கைது செய்தனா்.