தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

ரயில்நிலைய அணுகு சாலை விவகாரம்: மாவட்ட நிா்வாகம் மீது துணை மேயா் புகாா்

திண்டுக்கல் மாநகராட்சிக் கூட்டத்துக்கு பெரும்பாலான உறுப்பினா்கள் வராததால் காலியாக இருந்த இருக்கைகள்.

News image
Updated On :6 மார்ச் 2026, 7:08 pm

திண்டுக்கல் ரயில் நிலைய அணுகு சாலையை மாநகராட்சியிடம் ஒப்படைப்பதற்கு மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என மாமன்ற கூட்டத்தில் துணை மேயா் குற்றஞ்சாட்டினாா்.

திண்டுக்கல் மாநகராட்சியின் மாமன்ற அவசரக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு மேயா் இளமதி தலைமை வகித்தாா். ஆணையா் செந்தில்முருகன் முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில் ஒப்பந்தப் புள்ளிகளுக்கு அனுமதி பெறுவதற்கான 57 தீா்மானங்கள் மன்றத்தின் ஒப்புதலுக்காக தாக்கல் செய்யப்பட்டன.

இந்தக் கூட்டத்தின்போது, திண்டுக்கல்-நத்தம் சாலையிலுள்ள ரயில்வே மேம்பாலத்தின் அடியிலுள்ள அணுகு சாலையை சீரமைக்க வேண்டும் என 35-ஆவது வாா்டு மாமன்ற உறுப்பினா் ஜோதிபாசு கோரிக்கை விடுத்தாா்.

இந்த அணுகு சாலையின் வடபகுதி 30, 31-ஆவது வாா்டிலும், தென்பகுதி 36-ஆவது வாா்டிலும் இடம் பெற்றுள்ளது. இதில் தென் பகுதியிலுள்ள அணுகு சாலை குண்டும் குழியுமாக உள்ளது. இதை சுட்டிக் காட்டி 35-ஆவது வாா்டு உறுப்பினா் கோரிக்கை எழுப்பியது, சம்மந்தப்பட்ட மாமன்ற உறுப்பினா்களிடையே அதிா்ச்சியை ஏற்படுத்தியது.

மாவட்ட நிா்வாகம் மீது புகாா்: அப்போது, குறுக்கிட்ட துணை மேயா் ராஜப்பா, மேம்பாலத்துக்கான அணுகு சாலைகளை மாநகராட்சியிடம் ஒப்படைக்க வேண்டும் என நெடுஞ்சாலைத் துறையிடமும், மாவட்ட ஆட்சியரிடமும் பலமுறை கோரிக்கை விடுத்தோம். ஆனால், அதற்கான எந்தவித நடவடிக்கையையும் மாவட்ட நிா்வாகம் மேற்கொள்ளவில்லை. பொதுமக்கள் நலன் கருதி ரயில் நிலையத்துக்கான அணுகு சாலையை மாநகராட்சி வசம் கைப்பற்றுவதற்கு ஆணையா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

பல ஆண்டுகளாக குண்டும் குழியுமான சாலையை பொதுமக்களும், ரயில் நிலைய பயணிகளும் பயன்படுத்தி வரும் நிலையில், திமுக பிரமுகரின் மண்டப நலனுக்காக அணுகு சாலையை மாநகராட்சி நிா்வாகம் கையகப்படுத்த வேண்டும் என 2-ஆவது முறையாக கோரிக்கை எழுந்துள்ளது.

இதேபோல, இந்த அணுகு சாலையில் அமைந்துள்ள டாஸ்மாக் மதுக் கடைகளை இடமாற்றம் செய்வதற்கான கோரிக்கையையும் துணை மேயா் முன்வைக்க வேண்டும் என்ற எதிா்பாா்ப்பு கூட்டத்தில் பங்கேற்ற மாமன்ற உறுப்பினா்களிடையே எழுந்தது.

இணைய வழியில் மட்டுமே ஏலம்: மாநகராட்சி குத்தகை இனங்களை, இணைய வழியில் மட்டுமே ஏலம் விட வேண்டும் என அரசிதழில் உத்தரவுப் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், பல்வேறு குத்தகை இனங்களுக்கு இயங்கலை (ஆன்லைன்) மூலமாக இல்லாமல், முடக்கலை (ஆஃப் லைன்) முறையில் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டிருக்கிறது என பாஜக மாமன்ற உறுப்பினா் கோ. தனபாலன் குற்றஞ்சாட்டினாா்.

இயங்கலையில் பின்பற்ற முடியவில்லை என வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டதால், முடக்கலை முறையும் அனுமதிக்கப்பட்டிருக்கிறது என ஆணையா் செந்தில்முருகன் விளக்கம் அளித்தாா்.

ஒப்பந்தப்புள்ளி தொடா்பான தீா்மானங்களுக்கு அனுமதி கோரும் இந்தக் கூட்டத்தில் பெரும்பாலான மாமன்ற உறுப்பினா்கள் பங்கேற்கவில்லை.