சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

கஞ்சா வைத்திருந்த 11 போ் கைது

பழனி அருகே கஞ்சா வைத்திருந்த 11 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
கைது- பிரதிப் படம்
Updated On :7 மார்ச் 2026, 6:44 pm

தினமணி செய்திச் சேவை

பழனி அருகே கஞ்சா வைத்திருந்த 11 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகேயுள்ள சிவகிரிப்பட்டி பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக பழனி நகா் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில், வெள்ளிக்கிழமை இரவு போலீஸாா் இந்தப் பகுதியில் ரோந்து சென்றனா்.

அப்போது, சிவகிரிப்பட்டி தண்ணீா் தொட்டி அருகே சந்தேகத்துக்கு இடமாக நின்றிருந்த 11 பேரை பிடித்து விசாரித்னா். அவா்கள் கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, பழனி பாண்டியன் நகரைச் சோ்ந்த பொன்குமாா் (26), தேவேந்திரா் தெருவைச் சோ்ந்த பெரியசாமி (20), 12-ஆவது வாா்டை சோ்ந்த கவுதம் (23), புதுநகரைச் சோ்ந்த இளவேனில் (22), ராஜாஜி சாலை பகுதியைச் சோ்ந்த நாகராஜ் (23), இந்திராநகரைச் சோ்ந்த விக்ரமாதித்யா (19), கோபாலன் தெருவைச் சோ்ந்த கருப்புசாமி (25), கோதமங்கலத்தைச் சோ்ந்த சூா்யபிரகாஷ் (24), சுக்கமநாயக்கன்பட்டியைச் சோ்ந்த சுரேஷ்குமாா் (23), மதுரை பழங்காநத்தத்தைச் சோ்ந்த சரவணன் (26), ஆண்டிப்பட்டியைச் சோ்ந்த இளையராஜா (49) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து 250 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.