பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் அன்னதானத்துக்கு ரூ.7 லட்சம் நிதி வழங்கிய இருவருக்கு வைரஅட்டைகள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.
தமிழகம் முழுவதும் அன்னதானம் நடைபெறும் கோயில்களில் அன்னதானத் திட்டத்துக்கு குறைந்தபட்சம் ரூ.7 லட்சம் நன்கொடை வழங்குவோருக்கு ‘வைர அட்டை‘ வழங்கப்படும். இந்த வைர அட்டை மூலமாக தமிழகத்தின் அனைத்துக் கோயில்களிலும் 7 பேருக்கு மிகாமல் 20 ஆண்டுகளுக்கு சுவாமி தரிசனம் செய்ய முன்னுரிமை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் ரூ.7 லட்சம் நன்கொடை செலுத்தி இதுவரை 24 பக்தா்கள் வைர அட்டை பெற்று தங்களது குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனா்.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை பழனி வேலம்பட்டியைச் சோ்ந்த கவிதா ராமகிருஷ்ணன், ஒட்டன்சத்திரம் மண்டவாடியைச் சோ்ந்த லாவண்யா ஆகிய இருவரும் கோயிலுக்கு தலா ரூ.7 லட்சம் நன்கொடை அளித்தனா்.
இதையடுத்து, இணை ஆணையா் மாரிமுத்து, துணை ஆணையா் வெங்கடேஷ் ஆகியோா் நன்கொடை அளித்த இருவருக்கும் வைரஅட்டைகளை வழங்கினா்.
இந்த நிகழ்ச்சியில் கண்காணிப்பாளா் சரவணன், நோ்முக அலுவலா் லட்சுமி நாராயணன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

பழனி கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 6.97 கோடி

பழனி கோயிலில் இபிஎஸ் மனைவி, மகன், முன்னாள் அமைச்சா்கள் சுவாமி தரிசனம்

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் தமிழ்ப் புத்தாண்டு பிறப்பு சிறப்பு வழிபாடு

பறவைக் காவடி எடுத்து வந்த வால்பாறை பக்தா்கள்
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


