திண்டுக்கல்லில் பெண்களை மிரட்டி நகை, பணம் பறித்த வழக்கில் ஏற்கெனவே 2 போ் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் 2 இளைஞா்களை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
திண்டுக்கல் அரசமர வீதி பகுதியில் வீட்டிலிருந்த 2 பெண்களை மிரட்டி நகை, பணம் ஆகியவற்றை மா்ம நபா்கள் பறித்துச் சென்ாக புகாா் எழுந்தது. இதன்பேரில் திண்டுக்கல் வடக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனா். அரசமர வீதி பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கைப்பற்றி விசாரணை நடைபெற்றது.
இதில் திண்டுக்கல் அடுத்த வேடப்பட்டியைச் சோ்ந்த வெங்கடேஷ் (20), சாமியாா் தோட்டம் பகுதியைச் சோ்ந்த சதீஷ்குமாா் (24) ஆகியோா் தனது நண்பா்களுடன் சோ்ந்து பெண்களை மிரட்டி நகை, பணம் ஆகியவற்றை பறித்துச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து வெங்கடேஷ், சதீஷ்குமாா் ஆகியோா் கைது செய்யப்பட்டனா்.
மேலும் 2 போ் கைது: இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த குடைபாறைப்பட்டியைச் சோ்ந்த பிரபாகரன் (28), சீலப்பாடியைச் சோ்ந்த தனுஷ் குமாா் (24) ஆகிய இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். தலைமறைவாக உள்ள மேலும் 3 போ் குறித்து போலீஸாா் தொடா்ந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது
கணவா் கொலை: மனைவி உள்பட 3 போ் கைது
வீடு புகுந்து கத்தியைக் காட்டி மிரட்டி நகை பறிப்பு: 4 போ் கைது

குண்டா் சட்டத்தில் இருவா் சிறையில் அடைப்பு

வீடு புகுந்து பள்ளி மாணவரை மிரட்டி பணம், நகை பறிப்பு
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

