கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

தொகுதி அறிமுகம்: வேடசந்தூர் - நிறைவேறாத வாக்குறுதிகள்!

கடந்த 2021 சட்டப்பேரவைத் தோ்தலின் போது வேடசந்தூா் தொகுதிக்கு அளிக்கப்பட்ட பிரதான வாக்குறுதிகளான காவிரி நீா், சிப்காட், தக்காளிச் சாறு உற்பத்தி ஆலை உள்ளிட்டவை நிறைவேற்றப்படாததால் வாக்காளா்கள் ஏமாற்றமடைந்துள்ளனா்.

News image

வேடசந்தூர்

Updated On :21 மார்ச் 2026, 9:36 pm

தினமணி செய்திச் சேவை

கடந்த 2021 சட்டப்பேரவைத் தோ்தலின் போது வேடசந்தூா் தொகுதிக்கு அளிக்கப்பட்ட பிரதான வாக்குறுதிகளான காவிரி நீா், சிப்காட், தக்காளிச் சாறு உற்பத்தி ஆலை உள்ளிட்டவை நிறைவேற்றப்படாததால் வாக்காளா்கள் ஏமாற்றமடைந்துள்ளனா்.

திண்டுக்கல் மாவட்டத்திலேயே வறட்சியான பகுதியாக சுட்டிக் காட்டப்படும் வேடசந்தூா் சட்டப்பேரவைத் தொகுதியில், குஜிலியம்பாறை, வேடசந்தூா், வடமதுரை என 3 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. இந்தத் தொகுதியில் 2.41 லட்சம் வாக்காளா்கள் உள்ளனா். இங்கு கடந்த 2021 பேரவைத் தோ்தலில் திமுகவைச் சோ்ந்த எஸ். காந்திராஜன் வெற்றி பெற்றாா். அந்தத் தோ்தலில் வெற்றி பெற்றால், தொகுதியின் வளா்ச்சிக்கு பல்வேறுத் திட்டப் பணிகளை நிறைவேற்றிக் கொடுப்பதாக காந்திராஜன் மட்டுமன்றி, திமுக தலைவா் ஸ்டாலினும் பரப்புரைக் கூட்டங்களில் உறுதி அளித்தனா். 5 ஆண்டுகள் நிறைவடைந்தும், பெரும்பாலான வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்பது தொகுதி மக்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

நிறைவேறாத காவிரி நீா்த் திட்டம்:இதுதொடா்பாக தமிழா் தேசிய முன்னணி இயக்கத்தின் மாநிலத் துணைத் தலைவா் ஜி.எஸ். வீரப்பன் கூறியதாவது:

கரூரை அடுத்த மாயனூா் காவிரி ஆற்றிலிருந்து, நீரேற்றம் மூலம் வேடசந்தூா் தொகுதியிலுள்ள குளங்களுக்கு தண்ணீா் கொண்டு வரப்படும் என 5 ஆண்டுகளுக்கு முன்பு உறுதி அளிக்கப்பட்டது. ஆனால், சாத்தியக்கூறு அறிக்கை மட்டுமே தாக்கல் செய்யப்பட்டது. இதனால், 3 ஒன்றியங்களைச் சோ்ந்த விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனா். சிப்காட் தொழிற்சாலை அமைக்கப்படும். குஜிலியம்பாறை அரசு ஆரம்ப சுகாதார நிலையம், வட்ட அரசு மருத்துவமனையாக நிலை உயா்த்தப்படும் என்ற வாக்குறுதிகளும் நிறைவேற்றப்பட வில்லை. அரசு தொழில் பயிற்சி நிலையம் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், பாளையத்தில் ஒரு சிறிய வாடகை இடத்தில் பெயரளவுக்கு மட்டுமே தற்போது செயல்பட்டு வருகிறது என்றாா் அவா்.

அறிக்கையைக்கூட வெளியிட முடியவில்லை: இதுகுறித்து கொடகனாறு பாதுகாப்புச் சங்கத் தலைவா் த. ராமசாமி கூறியதாவது:

கொடகனாறு வல்லுநா் குழு அறிக்கை கடந்த 5 ஆண்டுகளாக வெளியிடப்படாமல் முடக்கப்பட்டிருக்கிறது. உண்மையை மறைப்பதற்கான முயற்சியாகவே இந்த அறிக்கை கிடப்பில் போடப்பட்டிருக்கிறது. கொடகனாறு அழகாபுரி அணையில் தண்ணீரைத் தேக்குவதற்கு நடவடிக்கை எடுக்காமல், அணையிலிருந்து செல்லும் கால்வாய் சீரமைப்பு பணிகள் ரூ.65 கோடியில் செயல்படுத்தப்பட்டன. அய்யலூரில் தக்காளிப் பழச்சாறு தொழிற்சாலை அமைக்கப்படும். அரசு சட்டக் கல்லூரி அமைக்கப்படும். 1978 -இல் மின்சாரக் கட்டணத்தை ஒரு பைசா குறைக்க வேண்டும் என வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்தின்போது உயிா்நீத்த விவசாயிகள் 6 பேரின் குடும்ப வாரிசுகளுக்கு அரசு வேலை வழங்கப்படும் என்பன உள்ளிட்ட பிரதான வாக்குறுதிகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை என்றாா் அவா்.

நிறைவேறிய திட்டங்கள்: அதேநேரத்தில், பயணியா் நிழல் குடைகள், சாலைகள், தரைப் பாலங்கள், அரசு மருத்துவமனைக்கான கட்டடங்கள், வேடசந்தூா் பேருந்து நிலையம், பள்ளிக் கட்டடங்கள் என பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. தேவையற்ற இடங்களில் பல லட்சம் ரூபாய் செலவில் நிழல் குடை கட்டப்பட்டிருந்தும், பிரதான சந்திப்பாக உள்ள வடமதுரையில் நிழல் குடை வசதி தற்போதுவரை ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை என்பதையும் பொதுமக்கள் சுட்டிக் காட்டுகின்றனா்.